முக்கிய செய்தி: வரும் 25-ம் தேதி வரை பொதுமாறுதல் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கலாம்…!

tn school 2025

தொடக்க, நடுநிலைப் பள்ளி அனைத்து வகையான ஆசிரியர்கள் 2025-2026. பொதுமாறுதல் கலந்தாய்வு விண்ணப்பங்கள் EMISல் பதிவேற்றம் செய்வது சம்பந்தமான தொடக்கக்கல்வி இயக்குனர் அறிவுரை.


இது குறித்து பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பில்; கடந்த 2024-25ம் கல்வியாண்டிற்கான ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல்கள் சார்பாக வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் மின்னஞ்சல் மூலமாக அனுப்பிவைக்கப்பட்டது. அதனைப் பின்பற்றி கடந்த 2024-25-6 ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல்கள் கலந்தாய்வுப் பணிகள் நடத்தி முடிக்கப்பட்டன. அதே போல 2025-26 ஆம் கல்வியாண்டிற்கும் அனைத்து வகை ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வினை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இக்கலந்தாய்வு பணிகள் கல்வி தகவல் மேலாண்மை முகமை (EMIS) இணையதள வாயிலாக நடைபெறும் எனவும். அதற்கான ஆயத்தப்பணிகளை மேற்கொள்ளவும். அதனைத் தொடர்ந்து மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள விருப்பம் தெரிவிக்கும் ஆசிரியர்களின் விண்ணப்பங்களை EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்வது குறித்து அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அணைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு தொடக்கக் கல்வி அறிவுறுத்தப்படுகிறது.

மாறுதல் கோரும் விண்ணப்பங்களை 25.6.2025 அன்று மாலை 6 மணி வரை EMISல் இணையத்தில் பதிவேற்றம் மேற்கொள்ளலாம். ஒவ்வொரு ஆசிரியரும் மாறுதலுக்கான விண்ணப்பத்தினை விண்ணப்பிக்கும்போது EMIS இணையத்தில் தங்களுக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட Individual Login ID ஐ பயன்படுத்தி EMIS வெளியிடப்பட்டுள்ள மாறுதல் கோரும் படிவத்தில் உரிய விவரங்களை பதிவேற்றம் செய்திடல் வேண்டும். அவ்வாறு பதிவேற்றம் செய்யப்படும்போது ஏதேனும் ஆசிரியர் சார்பான விவரங்கள் தவறுதலாக இருப்பின் பிறந்த தேதி பணியில் சேர்ந்த நாள், ஆசிரியரின் பெயர், பள்ளியின் பெயர் மற்றும் இதரவைகள் அதிலிருந்து வெளியேறி தங்கள் பள்ளிக்கென உள்ள Login ID Teacher Profile சென்று தவறாக உள்ள விவரங்களை சரிசெய்யப்பட்ட பின்னர் மீளவும் தங்களுடைய Individual Login ID யில் சென்று அனைத்து விவரங்களையும் சரியாக பூர்த்தி செய்யப்பட்டவுடன் Submit செய்திடல் வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More: மனிதர்களே கிடையாது.. பஸ் ஸ்டாப் முதல் டீ கடை வரை மனித பொம்மைகள் வாழும் அதிசய கிராமம்..!!

Vignesh

Next Post

"ஒரு பூமிக்கான யோகா"!. விசாகப்பட்டினத்தில் பிரதமர் மோடி தலைமையில் பிரமாண்ட யோகா நிகழ்வு!. 3 லட்சம் பேர் பங்கேற்பு!

Sat Jun 21 , 2025
சர்வதேச யோகா தினத்தையொட்டி விசாகப்பட்டினத்தில் நடத்தப்படும் யோகா தின கொண்டாட்டங்களில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இந்த பிரமாண்ட நிகழ்வில் 3 லட்சம் பேர் பங்கேற்கவுள்ளனர். ஜூன் 21 அன்று இந்தியா மற்றும் உலகம் முழுவதும் மிகுந்த உற்சாகத்துடன் 11வது சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான கருப்பொருள், “ஒரு பூமிக்கான யோகா, ஒரு ஆரோக்கியம்”, தனிப்பட்ட நல்வாழ்விற்கும் கிரகத்தின் ஆரோக்கியத்திற்கும் இடையிலான உள்ளார்ந்த தொடர்பை வலியுறுத்துகிறது, இது ” […]
pm modi yoga 11zon

You May Like