மகளிர் உரிமைத்தொகை பெற 24-ம் தேதி முதல் விண்ணப்பிக்க வேண்டும்‌…! இந்த ஆவணங்கள் அவசியம்…

மகளிருக்கான உரிமைத்தொகை பெற 24 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.

வேலூர்‌ மாவட்ட ஆட்சியர்‌ வெளியிட்ட செய்தி குறிப்பில். மாவட்டத்தில்‌ மொத்தமுள்ள 699 நியாய விலைக்‌ கடைகளில்‌ மொத்தம்‌ 4,53,934 குடும்ப அட்டைகள்‌ உள்ளன. இதில்‌, முதற்கட்டமாக 418 நியாய விலைக்‌ கடைகளுக்கு உட்பட்ட3,02,955 குடும்ப அட்டைதாரர்களின்‌ விண்ணப்பங்கள்‌ ஜூலை 24 முதல்‌ ஆகஸ்ட்‌ 4-ம்‌ தேதி வரையும்‌, இரண்டாம்‌ கட்டமாக 281 நியாய விலைக்‌ கடைகளுக்கு உட்பட்ட 1,50,987 குடும்ப அட்டைதாரர்களின்‌ விண்ணப்பங்கள்‌ ஆகஸ்ட்‌ 5 முதல்‌ 16-ம்‌ தேதி வரையும்‌ பதிவு செய்யப்படும்‌ என தெரிவித்துள்ளார்.


தேவைப்படும் ஆவணங்கள்:

விண்ணப்பம்‌ வழங்கப்படும் போதே விண்ணப்பத்துடன்‌ விண்ணப்பப்பதிவு மேற்கொள்ளும்‌ இடம்‌, நாள்‌, நேரம்‌ ஆகியவை அடங்கிய டோக்கனும்‌ இணைத்து வழங்கப்படும்‌. விண்ணப்பதாரர்கள்‌ தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நாள்‌, நேரங்களில்‌ தங்களுக்கு ஒதுக்கப்பட்ட முகாம்களுக்கு சென்று விண்ணப்பங்களை பதிவு செய்து கொள்ளலாம்‌.

சம்பந்தப்பட்ட பயனாளிகள்‌ மட்டுமே விண்ணப்பங்களை விண்ணப்பப்பதிவு முகாம்களுக்கு கொண்டு வரவேண்டும்‌. விண்ணப்ப முகாம்களுக்கு செல்லும்போது பெண்‌ உறுப்பினரின்‌ ஆதார்‌ அட்டை, குடும்ப அட்டை, வங்கிகணக்கு புத்தகம்‌, மின்சார வாரியகட்டண ரசீது ஆகியவற்றின்‌ அசல்களை எடுத்துச்‌ செல்ல வேண்டும்‌.

Vignesh

Next Post

காலக்கெடுவை நீட்டிக்க வாய்ப்பில்லை!... ஜூலை 31-க்குள் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யுங்கள்!... மத்திய அரசு!

Mon Jul 17 , 2023
காலக்கெடுவை நீட்டிக்க வாய்ப்பில்லை என்பதால், கடைசி நிமிட அவசரத்தைத் தவிர்க்க, வரி செலுத்துவோர் ஜூலை 31, 2023க்குள் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. சம்பளம் பெறக்கூடிய வருமான வரி செலுத்தக்கூடிய நபர்கள் 2022-23 ஆண்டிற்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் ஜூலை 31 ஆகும். ஜூலை 11 ஆம் தேதி வரை AY 2023-24 (FY 2022-23) ஆண்டிற்கான இன்கம் டேக்ஸ் […]
வருமான

You May Like