அட்டகாசம்…! மாதம்‌ தோறும் ரூ.1,000 பெற வரும் 11-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்….! முழு விவரம் இதோ…!

மாதம்‌ தோறும்‌ 1,000 ரூபாய்‌ பெரும் புதுமை பெண்‌ திட்டத்திற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர்‌ ஸ்டாலின் அவர்களால்‌ 05.09.2022 அன்று அரசு பள்ளிகளில்‌ 6 முதல்‌ 12-ம்‌ வகுப்பு வரை படித்து, மேல்‌ படிப்பு அல்லது தொழில்நுட்ப படிப்பு பயிலும்‌ மாணவிகளுக்கு மாதம்‌ தோறும்‌ 1,000 ரூபாய்‌ வழங்கும்‌ புதுமை பெண்‌ திட்டம்‌ துவங்கப்பட்டது.

இது வரை 2,3, மற்றும்‌ 4ம்‌ ஆண்டில்‌ பயிலும்‌ 1.13 லட்சம்‌ மாணவிகள்‌ இத்திட்டத்தில்‌ உதவி தொகையை பெற்று பயன்‌ அடைந்துள்ளார்கள்‌. தற்போது https://www.pudhumaipenn.tn.gov.in என்ற வலைத்தளம் மூலம் முதலாம்‌ ஆண்டு பயிலும்‌ மாணவிகளும்‌ விண்ணப்பிக்கலாம்‌. இணையத்தில், மாணவிகள்‌, அனைவரும்‌ சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள்‌ வாயிலாக இன்று முதல்‌ 11-ம்‌ தேதி வரை பதிவு செய்யலாம்‌.

செப்.5 முதல் மாணவிகளுக்கு ரூ.1000..? சிறப்பு விருந்தினர் இவர்தான்..! வெளியான முக்கிய தகவல்

அரசு பள்ளிகளில்‌ பயின்ற மாணவிகள்‌ மட்டுமே இத்திட்டத்திற்கு தகுதியான நபர்கள். மாணவிகள்‌ தங்கள்‌ கல்வி நிறுவனங்கள்‌ மூலமாக மட்டுமே விண்ணப்பம்‌ செய்ய வேண்டும்‌, நேரடியாக விண்ணப்பிக்க கூடாது. இத்திட்டதின்‌ கீழ்‌ விண்ணப்பிக்கும்‌ முறை மற்றும்‌ தகுதி வரம்பு குறித்து அனைத்து மாணவிகளுக்கும்‌ கல்வி பயிலும்‌ நிறுவனங்களில்‌ நவம்பர்‌ 11-ம்‌ தேதி வரை சிறப்பு முகாம்கள்‌ நடைபெறும்‌.

மாணவிகள்‌ தவறாமல்‌ அவர்களுடைய ஆதார்‌ அட்டை மற்றும்‌ (கல்வி மேலாண்மை தகவல்‌ திட்ட எண்ணுக்காக EMIS NO) மாற்றுச்‌ சான்றிதழ்‌ சமர்ப்பிக்க வேண்டும்‌, மேலும்‌, தற்போது 2,3, மற்றும்‌ 4ம்‌ ஆண்டுகளில்‌ படிக்கும்‌ கல்லூரி மாணவிகள்‌, முதற்கட்டத்தில்‌ இத்‌ திட்டத்தின்‌ கீழ்‌ விண்ணப்பிக்க தவறியவர்கள்‌, தற்போது விண்ணப்பிக்கலாம்‌‌. மேலும்‌, விண்ணப்பம்‌ பூர்த்தி செய்யும்‌ முறையில்‌ மாணவிகளுக்கு சந்தேகங்கள்‌ ஏதும்‌ இருப்பின்‌, சமூக நல இயக்குநாக அலுவலகத்தில்‌ மாநில அளவில்‌ செயல்படும்‌ உதவி மையத்தினை திங்கள்‌ முதல்‌ வெள்ளி வரை, காலை 10 மணி முதல்‌ 5 மணி வரை 9150056809, 9150056805, 9150056801 மற்றும்‌ 9150056810 எண்களில்‌ தொடர்பு கொள்ளலாம்‌.

மேலும்‌ mraheas@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல்‌ அனுப்பலாம்‌,முதலாம்‌ ஆண்டு பயிலும்‌ தகுதிவாய்ந்த மாணவிகள்‌ அனைவரும்‌, விண்ணப்ப முறையினை சரியாக தெரிந்துகொண்டு, கடைசி தேதிக்கு முன்பாக விண்ணப்பிக்க வேண்டும் என சேலம் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

மயோசிடிஸ் நோய் தீவிரமானதா? என்னென்ன பாதிப்புகளை ஏற்படுத்தும்?

Tue Nov 1 , 2022
நடிகை சமந்தா மயோசிடிஸ் எனும் நோய் எதிர்ப்புத்திறன் பாதிப்பு இருப்பதாக கூறி, சிகிச்சை பெற்றுக் கொண்டே டப்பிங் பணியில் ஈடுபடும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு மயோசிடிஸ் என்கிற நோயால் நான் பாதிக்கப்பட்டது தெரிய வந்தது. நோயின் பாதிப்பு தணிந்த பிறகு அனைவரிடமும் இதைப் பகிர்ந்து கொள்ளலாம் என இருந்தேன். ஆனால் நான் நினைத்ததை விடவும் குணமாக இன்னும் நாள் ஆகும் எனத் தெரிகிறது என்று […]

You May Like