சமூக ஊடகங்களில் பொழுதுபோக்காக பயன்படுத்தப்பட்டு வந்த இன்ஸ்டாகிராம், தற்போது வருமானம் ஈட்டும் தளமாக மாறியுள்ளது. முன்னர் லட்சக்கணக்கான பின்தொடர்பவர்களைக் கொண்ட பிரபலங்களுக்கே பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு இருந்த நிலையில், தற்போது 500 followers கொண்டவர்களுக்கும் கூட வருமான வாய்ப்புகள் திறக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்க மாற்றமாக பார்க்கப்படுகிறது.
சமீப காலங்களில், பெரிய influencers-ஐ விட மைக்ரோ இன்ஃப்ளூயன்சர்கள் (500–5,000 followers) மீது நிறுவனங்கள் அதிக கவனம் செலுத்த தொடங்கியுள்ளன. இதற்கு காரணம்
சமீப காலங்களில், டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையில் ஏற்பட்ட மாற்றங்களால், பெரிய influencers-ஐ விட மைக்ரோ இன்ஃப்ளூயன்சர்கள் மீது நிறுவனங்கள் அதிக கவனம் செலுத்த தொடங்கியுள்ளன.
500 முதல் 5,000 followers கொண்டவர்களே மைக்ரோ இன்ஃப்ளூயன்சர்கள் என அழைக்கப்படுகிறார்கள். இவர்களின் followers எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், அவர்கள் உடன் இருக்கும் தொடர்பும் நம்பிக்கையும் அதிகமாக இருப்பதால், அவர்களின் பரிந்துரைகள் மக்களிடம் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இதனால், சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை விளம்பரப்படுத்த இவர்களுடன் இணைந்து பணியாற்றுகின்றன.
இதன் மூலம், மைக்ரோ இன்ஃப்ளூயன்சர்களுக்கு பணம் மட்டுமின்றி இலவச பொருட்கள், நீண்டகால பிராண்ட் ஒத்துழைப்புகள் போன்ற பல வாய்ப்புகள் கிடைக்கின்றன. குறிப்பாக ஃபேஷன், ஃபிட்னஸ், உணவு மற்றும் அழகு போன்ற துறைகளில் உள்ளடக்கம் உருவாக்குபவர்கள் எளிதாக பிராண்டுகளின் கவனத்தை ஈர்க்க முடிகிறது. மேலும், அஃபிலியேட் மார்க்கெட்டிங் எனப்படும் முறையின் மூலம், தயாரிப்புகளுக்கான இணைப்புகளை பகிர்ந்து, அதன்மூலம் வாங்கும் ஒவ்வொரு பொருளுக்கும் கமிஷன் பெறும் வாய்ப்பும் அதிகரித்துள்ளது.
அதுமட்டுமல்லாமல், இன்ஸ்டாகிராம் தனிப்பட்ட திறமைகளை வருமானமாக மாற்றும் மேடையாகவும் மாறியுள்ளது. ஓவியம், வடிவமைப்பு, உடற்பயிற்சி, சமையல் போன்ற துறைகளில் திறமை கொண்டவர்கள், தங்களது சேவைகள் மற்றும் டிஜிட்டல் தயாரிப்புகளை இன்ஸ்டாகிராம் மூலம் விற்பனை செய்து வருமானம் ஈட்டுகின்றனர். இந்த முறையில், followers எண்ணிக்கையை விட அவர்களின் நம்பிக்கை மற்றும் உள்ளடக்கத்தின் தரமே முக்கிய பங்கு வகிக்கிறது.
Read more: No Sugar Challenge: 30 நாட்கள் சர்க்கரையை தவிர்த்தால் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும்..?



