சீனாவில் பணியாளர் ஒருவருக்கு சம்பளத்துடன், 365 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள ஷென்சென் நகரில் நிறுவனம் ஒன்று தனது ஊழியர்களுக்கு இரவு விருந்து அளித்துள்ளது. 3ஆண்டுகள் கொரோனா நோய்த்தொற்றுக்குப் பிறகு, இந்த விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது. பணியின்போது ஏற்படும் மன அழுத்தத்தில் விடுபடும் வகையில், இந்த விருந்தில் ஊழியர்களுக்கு அதிர்ஷ்ட குலுக்கல் போட்டி ஒன்றை நடத்தியது. அதன்படி, இந்த போட்டியில் வெற்றிபெற்ற ஊழியர் ஒருவருக்கு சம்பளத்துடன், 365 நாட்கள் விடுமுறை அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதன்படி போட்டியில் வெற்றிபெற்ற பணியாளர் ஒருவருக்கு சம்பளத்துடன் 365 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தனது ஊழியர்களுக்கு முழு ஆண்டு விடுமுறை அளிக்க நினைத்த முதல் நிறுவனம் இதுவல்ல என்று சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 2022 ஆம் ஆண்டில் இதே போன்று ஒரு ஊழியர்க்கு ஜாக்பாட்டை மற்றொரு ஷென்சென் நிறுவனம் வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.