#திருச்சி: எதிர் வீட்டு பெண் பார்க்கும் வகையில் நிர்வாணமாக ரோட்டில் நின்ற வாலிபர்..! 

திருச்சி மாவட்ட பகுதியில் உள்ள தொட்டியம் அருகில் காட்டுப்புத்தூர் சின்ன பள்ளிபாளையத்தில் சுவிசன் (33) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஜேசிபி ஆபரேட்டராக வேலை பார்த்து வருகிறார். 


இவரது வீட்டிற்கு அருகில் வசித்து வந்த 38 வயது பெண்ணுக்கும் இவருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அந்த பெண் அவரது வீட்டு சமையல் அறையில் சமையல் செய்து கொண்டிருந்த போது எதிர் வீட்டில் இருந்த சுவிசன் அந்தப் பெண் பார்க்கும்படி அவரின் எதிரே ஆடைகளை அவிழ்த்து விட்டு நிர்வாணமாக நின்றுள்ளார்.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த பெண் பக்கத்து வீட்டு வாலிபர் இவ்வாறு முகம் சுளித்து அருவறுக்கும் வகையில் நடந்து கொண்டுள்ளார் என்று காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

இதனையடுத்து பெண் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் சுவிசனை என்பவரை கைது செய்துள்ளனர்.

1newsnationuser5

Next Post

#கள்ளக்குறிச்சி: திருமணமான பெண்ணுடன் பேசிய இளைஞர்.. அந்தரங்க உறுப்பில் சூடு வைத்த கொடூரம்..!

Thu Jan 12 , 2023
கள்ளக்குறிச்சி மாவட்ட பகுதியில் வசிப்பவர் முகிலன்(21) (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). இவர் அங்குள்ள தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். முகிலன் அதே பகுதியை சேர்ந்த திருமணமான 26 வயதான பெண்ணிற்கு வாட்ஸாப்பில் குறுஞ்செய்திகளை அனுப்பி தொல்லை செய்துள்ளார்.  இது பற்றி அந்த பெண்ணின் உறவினர்களுக்கு தகவல் தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து பெண்ணின் உறவினர்கள் முகிலனைக் கண்டித்துள்ளனர். அப்போதும், தனது செயல்களை முகிலன் நிறுத்தவில்லை.  இந்த நிலையில் சில தினங்களுக்கு […]
’சாலையோர ரோமியோக்களுக்கு பாடம் கற்பிக்க வேண்டும்’..! சிறுமியை ITEM என அழைத்த நபர்..!! பரபரப்பு தீர்ப்பு

You May Like