#விழுப்புரம் : காதலித்த பெண்ணை ஏமாற்றிய இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறை..!

புதுச்சேரி மாநில பகுதியில் உள்ள ஆண்டியார்பாளையத்தில் அசீன்பாஷாவின் மகன் அமீன்பாஷா என்பவர் (26) திருபுவனையில் அமைந்துள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.


அதே பகுதியில் விக்கிரவாண்டியை சேர்ந்த 23 வயது பெண்ணுடன் 2018ம் ஆண்டே பழக்கம் ஏற்பட்டு வந்த நிலையில் இருவருமே காதலித்து வந்துள்ளனர். இதனிடையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகளை கூறி பெண்ணிடம் நெருங்கிப் பழகியுள்ளார்.

இதனை தொடர்ந்து சில நாட்களில் தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி அந்த பெண் கேட்டதற்கு, அமீன்பாஷா மறுத்துள்ளார்.இது பற்றி இளம்பெண் காவல்துறையில் வழக்குப் பதிவு செய்ததால் அமீன்பாஷாவை காவல்துறையினர் கைது செய்தனர். 

இந்த வழக்கு தற்போது விசாரணை, நடந்த போது, வழக்கை விசாரித்த நீதிபதி குற்றம் சாட்டப்பட்ட அமீன்பாஷாவிற்கு சுமார் 7 ஆண்டு சிறை தண்டனையும் , 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. அத்துடன் பாதிக்கப்பட்ட அப்பெண்ணுக்கு சுமார் 4 லட்சம் ரூபாய் அரசு சார்பில் இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. 

1newsnationuser5

Next Post

பொதுமக்களே உஷார்! வங்கிக் கணக்கில் இருந்து காணாமல் போன பணத்தை உடனே மீட்க இதை செய்யுங்கள்!

Sat Dec 10 , 2022
இப்போதெல்லாம் பண மோசடிகளில் ஈடுபடுபவர்கள் வீட்டிற்கு வந்து எனக்கு பணம் தாருங்கள் நான் அதை இரட்டிப்பாக்கி காட்டுகிறேன் என்று சொல்லி பணத்தை திருடுவதில்லை. மாறாக நேரடியாக பொதுமக்களின் வங்கிக் கணக்கில் கை வைக்கிறார்கள். அதாவது பொதுமக்கள் தேவையற்ற இடங்களில் வழங்கும் அவர்களுடைய கைப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி உள்ளிட்டவற்றை பயன்படுத்தி நேரடியாக அவர்களுடைய கைபேசி எண்ணுக்கும், மின்னஞ்சல் முகவரிக்கும் தேவையற்ற குறுஞ்செய்திகளை அனுப்பி அதன் மூலமாக நவீன முறையில் கொள்ளையடிக்க […]
money

You May Like