வெள்ளத்தில் சிக்கியவரை எப்படி காப்பாற்றுவது என்று நடந்த ஒத்திகையில் இளைஞர் பலி..! 

கேரள மாநிலத்தின் பத்தனம்திட்டா மாவட்டத்தின் பேரிடர் நிவாரண அமைப்பு, தீயணைப்புத் துறை மற்றும் வருவாய்த் துறை, பொதுமக்கள் சார்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்றுவது எப்படி ? என பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது.


அந்த வகையில் பத்தனம்திட்டா அருகே உள்ள கல்லுப்பாறை பகுதியில் உள்ள ஆற்றில் நேற்று நிகழ்ச்சி நடந்தது. நீச்சல் தெரிந்த 4 பேர் ஒத்திகையில் பங்கேற்க அங்கு அழைத்து வரப்பட்டனர்.

இதில் பினு சோமன் (35) என்பவர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தார். நீச்சல் தெரிந்திருந்தும், ஆழத்தில் மூழ்கியதால், அவரை உடனடியாக காப்பாற்ற முடியவில்லை. சிறிது நேரம் கழித்து பினு சோமன் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

மருத்துவமனையில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். பாதுகாப்பு ஒத்திகையின் போது நீரில் மூழ்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நிகழ்வின் போது முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை எனவும், ஆற்றில் மூழ்கிய இளைஞரை அழைத்துச் சென்ற ஆம்புலன்ஸில் போதிய வசதிகள் இல்லை எனவும் அப்பகுதியினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

1newsnationuser5

Next Post

#தர்மபுரி: வயலில் காதுகள் அறுக்கப்பட்டு மயங்கி கிடந்த பெண்.. நடந்து என்ன தெரியுமா..! 

Sun Jan 1 , 2023
தர்மபுரி மாவட்டம் கங்காபாளையம் பகுதியில் வசித்து வந்தவர் சின்னபையன். இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவி உள்ளார். கடந்த 27ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற ஜெயலட்சுமி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.  இதற்கிடையே ஜெயலட்சுமி ரத்த காயங்களுடன் இரண்டு காதுகளும் துண்டிக்கப்பட்ட நிலையில் வயலில் மயங்கி கிடந்துள்ளார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.  மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. போலீசார் […]

You May Like