மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக, குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் குற்றால அருவியில் காட்டாற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மெயின் அருவி, ஐந்தருவி, புலியருவி மற்றும் பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து முக்கிய அருவிகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. […]
Flood
ஆபரேசன் சாகர் பந்து – இலங்கைக்கு 1000 டன் நிவாரணப் பொருட்களை வழங்க இந்திய கடற்படை மேலும் நான்கு போர்க்கப்பல்களை அனுப்புகிறது. இலங்கைக்கு தேடல் மற்றும் மீட்பு, மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரண உதவிகளை வழங்குவதற்காக தொடங்கப்பட்ட ஆபரேசன் சாகர் பந்து நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இலங்கையில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மனிதநேய உதவிகளை வழங்குவதற்காக இந்திய கடற்படை ஐஎன்எஸ் கரியல், எல்சியு 54, எல்சியு 51, எல்சியு […]
மத்திய வியட்நாமில் பெய்த கனமழையால் கடுமையான வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன, இதனால் 41 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். வெள்ளத்தில் மூழ்கிய வீடுகளின் கூரைகளில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் மீட்புக் குழுக்கள் ஈடுபட்டுள்ளன. கடந்த மூன்று நாட்களாக, இப்பகுதியின் பல பகுதிகளில் மழைப்பொழிவு 150 செ.மீட்டரைத் தாண்டியுள்ளது. காபி வளரும் முக்கிய மண்டலங்கள் மற்றும் பிரபலமான கடற்கரை இடங்களுக்கு பெயர் பெற்ற இந்தப் பகுதி, பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. […]
Chennai city flooded again this year.. What happened to the Rs.4000 crore fund..? Opposition parties are shouting..
2025-26 ஆம் ஆண்டிற்கான மாநில பேரிடர் நிவாரண நிதியின், மத்திய பங்கின் 2வது தவணையாக ரூ.1,950.80 கோடியை முன்கூட்டியே விடுவிக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஒப்புதல் அளித்துள்ளார். 2025-26 ஆம் ஆண்டிற்கான மாநில பேரிடர் நிவாரண நிதியின், மத்திய பங்கின் 2வது தவணையாக ரூ.1,950.80 கோடியை முன்கூட்டியே விடுவிக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஒப்புதல் அளித்துள்ளார். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழையின் போது ஏற்பட்ட […]
மெக்சிகோவை புரட்டிப்போட்ட கனமழை, வெள்ளத்தில் சிக்கி இதுவரை பலியானோர் எண்ணிக்கை 130 ஆக அதிகரித்துள்ளது. வட அமெரிக்க நாடான மெக்சிகோவை பசிபிக் பெருங்கடல் சூழ்ந்துள்ளது. கடந்த 12-ம் தேதி காற்றழுத்த தாழ்வுநிலை அங்கு உருவானது. இது புயலாக வலுப்பெற்றது. மெக்சிகோவின் கடலோர மாகாணங்களான ஹிடால்கோ, புபேல்லா மற்றும் வெராக்ரூஸ் நகரை மையமாகக் கொண்டு இந்தப் புயல் தாக்கும் என கணிக்கப்பட்டது. அப்பகுதியில் கடந்த 4 நாளாக தொடர் மழை கொட்டி […]
பாகிஸ்தானில் கொட்டித்தீர்த்து வரும் கனமழையால் கடந்த 24 மணி நேரத்தில் 21 பேர் பலியாகியுள்ளதாக பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDMA) தெரிவித்துள்ளது . கிழக்கு பஞ்சாப் மாகாணத்தில் எட்டு பேர் உயிரிழந்துள்ளனர், பெரும்பாலும் ஆற்று வெள்ளம் மற்றும் வீடுகள் இடிந்து விழுந்ததில் ஏற்பட்டதாக ஆணையம் தெரிவித்துள்ளது. வடமேற்கு கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் புனர் மாவட்டத்தில் 13 இறப்புகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 15 ஆம் தேதி […]
ஹிமாசல பிரதேசத்தில் பெய்த கனமழை காரணமாக இதுவரை 355 பேர் உயிரிழந்துள்ளனர் என மாநில அவசரகால நடவடிக்கை மையம் தெரிவித்துள்ளது. இமயமலையையொட்டிய ஹிமாசல பிரதேசம், உத்தரகண்ட் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் கடந்த சில வாரங்களாக பலத்த மழையால் பெருவெள்ளமும் நிலச்சரிவுகளும் நேரிட்டுள்ளன. அண்டை மாநிலமான பஞ்சாபும் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஹிமாசல பிரதேசத்தில் கடந்த ஜூன் 20-இல் இருந்து இதுவரை 45 மேகவெடிப்புகள், 95 பெருவெள்ளங்கள், 132 பெரிய நிலச்சரிவுகள் ஏற்பட்டு, […]
கடந்த இரண்டு நாட்களாக வரலாறு காணாத மழை பெய்து வருவதால், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் தொடர்பான சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் பெரும்பாலோர் வைஷ்ணவ தேவி யாத்திரைப் பாதையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்கள் என்று கூறப்படுகிறது. புதன்கிழமை மழை சற்று தணிந்தாலும், வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட ஆறுகளில் வெள்ளம் குறையத் தொடங்கியதால் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் […]
பாகிஸ்தானில் தொடர்ந்து பெய்த கனமழையால் ஏற்பட்ட மேக வெடிப்பு மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி 154 பேர் பலியாயினர். பாகிஸ்தானின் மலை பாங்கான கைபர் பக்துன்வா மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தொடர் மழையினால் மேக வெடிப்பு மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. வட மேற்கு பஜாவுர் மாவட்டத்தில் நேற்று திடீரென ஏற்பட்ட மேக வெடிப்பை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ள பெருக்கில் பல வீடுகள் அடித்து செல்லப்பட்டன. இதில் […]

