சென்னை மாநகர பகுதியில் உள்ள விருகம்பாக்கத்தில் வியாபாரிகள் சங்கப் பேரவை மாநில ஒருங்கிணைப்பாளரான அருண்குமாரின் ஒரு வயது குழந்தை இளமாறன் எனபவர் கழிவறை படிக்கட்டு அருகில் வைக்கப்பட்டிருந்த தண்ணீர் பக்கெட்டி அருகில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.
அச்சமயத்தில் எதிர்பாராதவிதமாக திடீரென குழந்தை தவறி பக்கெட்டினுள் விழுந்ததாக கூறப்படுகிறது. இதனால் குழந்தை மயங்கிய நிலையில் பக்கெட் உள்ளே சில மணி நேரம் கிடந்துள்ளான்.
சிறிது நேரம் கழித்தே குழந்தையை கண்ட இளமாறனின் தாயார் உடனடியாக குழந்தையைத் தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.
குழந்தை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கே பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்தது விட்டதாக கூறியுள்ளனர்.
இது போன்று பெற்றோரின் அலட்சியத்தால் பக்கெட் நீரில் குழந்தைகள் மூழ்கி உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.