#சென்னை: பக்கெட்டினுள் விழுந்து ஒருவயது குழந்தை பலியான சம்பவம்..! 

சென்னை மாநகர பகுதியில் உள்ள விருகம்பாக்கத்தில் வியாபாரிகள் சங்கப் பேரவை மாநில ஒருங்கிணைப்பாளரான அருண்குமாரின் ஒரு வயது குழந்தை இளமாறன் எனபவர் கழிவறை படிக்கட்டு அருகில் வைக்கப்பட்டிருந்த தண்ணீர் பக்கெட்டி அருகில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். 


அச்சமயத்தில் எதிர்பாராதவிதமாக திடீரென குழந்தை தவறி பக்கெட்டினுள் விழுந்ததாக கூறப்படுகிறது. இதனால் குழந்தை மயங்கிய நிலையில் பக்கெட் உள்ளே சில மணி நேரம் கிடந்துள்ளான். 

சிறிது நேரம் கழித்தே குழந்தையை கண்ட இளமாறனின் தாயார் உடனடியாக குழந்தையைத் தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.

குழந்தை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கே பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்தது விட்டதாக கூறியுள்ளனர். 

இது போன்று பெற்றோரின் அலட்சியத்தால் பக்கெட் நீரில் குழந்தைகள் மூழ்கி உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

1newsnationuser5

Next Post

பெரியப்பா மகனுடன் பாலியல் உறவு..!! பாத்ரூமில் பிறந்த குழந்தை..!! மாடியிலிருந்து தூக்கி வீசிய கொடூரம்..!!

Mon Jan 16 , 2023
பெரியப்பா மகனுடன் உறவு வைத்துக்கொண்டதன் விளைவாக பிறந்த குழந்தையை, ஜன்னல் வழியே தூக்கி வீசிய இளம்பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர் மும்பை அருகே நவிமும்பை உல்வே என்ற இடத்தில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்புக்கு கீழே, பிறந்து சில மணி நேரமே ஆன குழந்தை ஒன்று கிடந்தது. இதனை அங்கிருந்தவர்கள் பார்த்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால், அங்கு […]
மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் 4,312 கருக்கலைப்புகள்..!! அதிர்ச்சி தரும் ஆர்டிஐ அறிக்கை..!!

You May Like