அதிரடி…! 100 நாள் வேலை திட்டம்..‌.! இதை கட்டாயம் பின்பற்ற வேண்டும்…! தமிழக அரசு அறிவிப்பு…!

100 நாள் வேலை வருகைபதிவேடு இணையவழியில்‌ மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது.

ஊரக வளர்ச்சி மற்றும்‌ ஊராட்சி துறையின்‌ மூலம்‌ செயல்படுத்தப்படும்‌ மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்‌திட்டம்‌ ஒவ்வொரு நிதியாண்டிலும்‌ ஊரகப்‌ பகுதிகளில்‌ திறன்சாரா, உடல்‌ உழைப்பினை மேற்கொள்ள விருப்பமுள்ள, வயது வந்தோர்‌உள்ள ஒவ்வொரு குடுூம்பத்திற்கும்‌ அதிகபட்சமாக 100 நாட்களுக்குவேலை வாய்ப்பினை அளிக்கிறது. மகாத்மா காந்தி தேசிய ஊரகவேலை உறுதிச்‌ சட்டத்தின்‌ கீழ்‌ உருவாக்கப்பட்ட இத்திட்டம்‌ மட்டுமே சட்டப்பூர்வ பாதுகாப்பு கொண்ட ஒரே வறுமை ஒழிப்பு திட்டமாகும்‌. 18 வயதுக்கு மேற்பட்டோர்‌ ஒவ்வொருவருக்கும்‌ இத்திட்டத்தின்‌ கீழ்‌ வேலை அட்டை பெறவும்‌ திறன்சாரா வேலை பெறவும்‌ உரிமை உண்டு.


கிராமப்புற ஏழைகளின்‌ வாழ்வாதாரத்தை மேம்படுத்த, நலிவுற்ற பிரிவினருக்கான தனிநபர்‌ பணிகளை அதிக அளவில்‌ மேற்கொள்ள அரசு வலியுறுத்தியுள்ளது. அதன்படி, பண்ணைக்குட்டை அமைத்தல்‌,நில மேம்பாட்டுப்‌ பணிகள்‌, நிலத்தை சமன்‌ செய்தல்‌, கல்‌ வரப்பு/மண்வரப்பு அமைத்தல்‌, தனிநபர்‌ நிலங்களில்‌ பழம்தரும்‌ மரங்கள்‌ நடுதல்‌, வெங்காயக்‌ கொட்டகை, அசோலா சாகுபடி அலகு, தோட்டக்கலைத்‌ தோட்டம்‌, தனிநபர்‌ கிணறு, மாடு/ஆடு/கோழி கொட்டகை அமைத்தல்‌ போன்ற பிற தனிநபர் விவசாயம்‌ சார்ந்த பணிகள்‌ மேற்கொள்ளப்படுகின்றன.

இத்திட்ட தொழிலாளர்களின்‌ வேலைக்கான தேவை, வருகைபதிவேடு, ஊதிய பட்டியல்‌ உருவாக்கம்‌, நிதி விடுவிக்கும்‌ ஆணை போன்றவை அனைத்தும்‌ இணையவழியில்‌ மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு வாரமும்‌ தொழிலாளர்கள்‌ வேலை செய்து முடித்த 15 நாட்களுக்குள்‌ அவர்களுக்கான ஊதியம்‌ அவர்களது வங்கிக்‌ கணக்குகளில்‌ நேரடியாக வரவு வைக்கப்படுகிறது.

இத்திட்ட செயல்பாட்டினை ஆய்வு செய்யும்‌ பொருட்டு ஊராட்சி அளவிலான பிரதிநிதிகளை கொண்டு சமூக தணிக்கை மேற்கொள்ளப்படுகிறது. அதில்‌ சுட்டிகாட்டப்படும்‌ குறைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

20230301 054039

Vignesh

Next Post

கவனம்...! அரசு உதவித்தொகை பெற ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும்...! இல்லை என்றால் சிக்கல்...!

Wed Mar 1 , 2023
ஆதிதிராவிடர்‌ நலத்துறையின்‌ மூலம்‌ கல்வி உதவித்‌ தொகைக்கான இணையதளம்‌ கடந்த 30.01.2023 அன்று திறக்கப்பட்டு இது வரை சுமார்‌ 3 லட்சம்‌ மாணாக்கர்கள்‌ விண்ணப்பித்துள்ளனர்‌. மேலும்‌ விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகின்றன. இத்திட்ட விதிமுறைகளின்படி, 2022-2023 ஆம்‌ கல்வியாண்டு முதல்‌, முதன்முறையாக e-kyc முறையில்‌ ஆதார்‌ எண்‌ மற்றும்‌ அதனுடன்‌ இணைக்கப்பட்ட தொலைபேசி எண்ணை கொண்டு அதார்‌விவரங்கள்‌ சரிபார்க்கப்பட்டு, இணையத்தில்‌ பெறப்பட்ட சாதிசான்று,வருமானச்சான்று, ஆதாருடன்‌ இணைக்கப்பட்ட சேமிப்புக்‌ கணக்கு எண்‌ ஆகிய அனைத்து […]
tn goverment 1

You May Like