இன்றே கடைசி நாள்…! 10 முதல் 12-ம் வகுப்பு மாணவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்…! இல்லையென்றால் சிக்கல்…!

10, 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்விற்கு விண்ணப்பிக்கத் தவறிய தனித்தேர்வர்கள், இன்று மாலை வரை தட்கல் முறையில் விண்ணப்பிக்கலாம்.

10, 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்விற்கு விண்ணப்பிக்க தவறிய தனித்தேர்வர்கள் தட்கல் முறையில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தவறிய தனித்தேர்வர்கள் இன்று மாலை வரை, மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுகள் இயக்கக சேவை மையங்களில் நேரில் சென்று தேர்வுக் கட்டணத்துடன் சிறப்புக் கட்டணம் செலுத்தி விண்ணப்பங்களைப் பதிவு செய்யலாம்.


மேல்நிலை மாணவர்கள் 1,000 ரூபாயும், 10-ம் வகுப்பு மாணவர்கள் 500 ரூபாயும் சிறப்புக்கட்டணம் செலுத்த வேண்டும். மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுத்துறையின் சேவை மையங்களின் விவரங்களையும், தேர்விற்கான அறிவுரைகள் மற்றும் தகுதிகளையும் www.dge1.tn.gov.in என்ற இணையதளத்திலும், கல்வித்துறையின் அலுவலகங்களிலும் தெரிந்து கொள்ளலாம்‌.

Vignesh

Next Post

சமையல் அறையை ஈஸியா, சூப்பரா க்ளீன் பன்ன செம்ம ஐடியா.. இது.!

Wed Feb 1 , 2023
சமையல் அறை என்றாலே எண்ணெய் கரை போகாமல் அழுக்காகவே காணப்படுகிறது. பலமுறை என்ன செய்தாலும் அந்த கரைகள் அகலுவதில்லை. ஆனால் இந்த இரண்டு பொருட்கள் இருந்தால் போதும் உடனடியாக சமையல் அறை பளிச்சென்று ஆகிவிடும். அதுமட்டுமல்லாமல் பழைய பாத்திரங்களையும் புதிது போன்று மாற்றிவிடும். பேக்கிங் சோடா மற்றும் எலுமிச்சை சேர்ந்த கலவையானது ஆக்ஸிஜனேற்ற பண்புகளையும் காரத்தன்மையையும் கொண்டுள்ளது.  சமையல் அறை மேற்பரப்பு சுத்தம் செய்யும் வழிமுறைகள் : சிறிதளவு பேக்கிங் சோடா […]
புளித்த இட்லி மாவை வைத்து மேஜிக்... புதிது போல் ஜொலிக்கும் கிச்சன், பாத்ரூம்கள்...எப்படி தெரியுமா?

You May Like