மார்ச் மாதத்தில் மேலும் 11,000 ஊழியர்கள் பணிநீக்கம்..? மெட்டாவின் முடிவால் அதிர்ச்சியில் ஊழியர்கள்…

பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா, மீண்டும் 11,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது..

கடந்த ஆண்டு முதலே பல்வேறு முன்னணி நிறுவனங்களும் பணி நீக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.. குறிப்பாக அமேசான், மெட்டா, கூகுள், ஓலா, ஸ்விகி உள்ளிட்ட பெருநிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.. அதே போல் மைக்ரோசாஃப்ட் தொடங்கி விப்ரோ வரை பல்வேறு முன்னணி ஐடி நிறுவனங்களும் பணி நீக்கம் தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன.. இதே போல் ஜூம், யாஹூ, கோ டாடி போன்ற நிறுவனங்களும் ஊழியர்களை பணியில் இருந்து நீக்கி வந்தன..

jobless istock 1074383 1643093695 1160333 1667875451 1171909 1671076006 1183731 1674463405

ஆட்குறைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக கடந்த ஆண்டு நவம்பர் உலகம் முழுவதும் சுமார் 11,000 ஊழியர்களை Meta நிறுவனம் பணிநீக்கம் செய்திருந்தது. இந்த சூழலில் மெட்டா நிறுவனம், மீண்டும் பணி நீக்க அறிவிப்பை வெளியிட உள்ளதாக தொடர்ந்து தகவல் வெளியான வண்ணம் உள்ளன.. நவம்பரில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் வேலை இழந்ததைப் போலவே, மற்றொரு பெரிய அளவிலான பணிநீக்கத்திற்கு மெட்டா தயாராகி வருவதாக கூறப்படுகிறது. அதன்படி, செயல்திறன் போனஸ் செலுத்தப்பட்டவுடன், மார்ச் மாதத்தில் சுமார் 11,000 பேரை பணிநீக்கம் செய்ய மெட்ட திட்டமிட்டுள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது…

சுமார் 11,000 பேர் அல்லது நிறுவனத்தின் 13 சதவிகிதம் பேர் வேலை இழக்க நேரிடலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.. மேலும் செயல்திறன் மதிப்பாய்வுகளில் ஆயிரக்கணக்கான ஊழியர்களுக்கு “துணை மதிப்பீடுகளை மெட்டா நிறுவனம் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது, இது நிறுவனத்தில் அதிக பணிநீக்கங்களுக்கு வழிவகுக்கலாம். சமீபத்திய செயல்திறன் மதிப்பாய்வுகளில் தோராயமாக 7,000 ஊழியர்களை “சராசரிக்கும் கீழே உள்ள நிலையில் உள்ளனர்” என்று வரிசைப்படுத்தியது.

எனவே வரவிருக்கும் வாரங்களில் அதிக ஊழியர்களை வெளியேறுவதற்கு மதிப்பீடுகள் வழிவகுக்கும் என்று மெட்டா எதிர்பார்க்கிறது.. போதிய அளவு ஊழியர்கள் பணியில் இருந்து விலகவில்லை என்றால் நிறுவனம் மற்றொரு சுற்று பணிநீக்கங்களை பரிசீலிக்கும்” என்று கூறப்படுகிறது.. மெட்டா நிறுவனம், வரவிருக்கும் வாரங்களில் அதிக ஊழியர்களை வெளியேறுவதற்கு மதிப்பீடுகளை எதிர்பார்க்கிறது” என்று தெரிவித்தது. போதிய அளவு வெளியேறவில்லை என்றால் நிறுவனம் மற்றொரு சுற்று பணிநீக்கங்களை பரிசீலிக்கும் என்று அறிக்கை கூறுகிறது. எனினும் பணிநீக்கங்கள் குறித்து மெட்டா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது..

1newsnationuser1

Next Post

9 வயது சிறுமியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறிய 67 வயது முதியவருக்கு 5 ஆண்டு கால சிறை தண்டனை……! நீதிமன்றம் அதிரடி…..!

Fri Feb 24 , 2023
செங்கல்பட்டு மாவட்டம் நீலாங்கரை பகுதியைச் சேர்ந்த ராஜி என்பவரின் மகன் ஜெயபால் (67) இவர் சென்ற 2013 ஆம் வருடம் நவம்பர் மாதம் தன்னுடைய அண்டை வீட்டில் வசித்து வரும் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு வழங்கியுள்ளார். இது தொடர்பாக சிறுமி பெற்றோரிடம் கூறினார் இந்த நிலையில் சிறுமியின் பெற்றோர் வழங்கிய புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் ஜெயபாலை கைது செய்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து போச்சு […]
pocso

You May Like