தமிழகத்தில் உள்ள 12,000 பகுதி நேர ஆசிரியர்களுக்கு மே மாத ஊதியம் கிடையாது என அரசு அறிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், கணினி உள்ளிட்டஎட்டு பாடங்களில், பகுதி நேரஆசிரியர்களாக, 12 ஆயிரம் பேர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு மாத தொகுப்பூதியமாக 10ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள 12,000 பகுதி நேர ஆசிரியர்களுக்கு மே மாத ஊதியம் கிடையாது என அரசு வெளியிட்ட அறிவிப்பால் பகுதிநேர அரசு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த அறிவிப்பிற்கு எதிராக பலர் தங்களது எதிர்ப்பினை பதிவு செய்து வருகின்றனர்.