#சேலம்: 72 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த 15 வயது சிறுவன்..!

சேலம் மாவட்ட பகுதியில் குடிபோதையில் 72 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்ய முயன்ற சிறுவன் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.


சேலம் மாவட்ட பகுதியில் உள்ள வீராணம் அருகே எம்.பாலப்பட்டியை சேர்ந்தவர் லட்சுமி( 72) . இவர், நேற்று மதியம், 2:45 மணியளவில் அதே பகுதியில், வயக்காட்டில் மாடுகளுக்கு புல் அறுத்துக் கொண்டிருந்தார்.

அப்போது பாரில் 2 பேர் மது அருந்திக் கொண்டிருந்தனர். அவர்கள் போதையில் மூதாட்டி லட்சுமியை பலாத்காரம் செய்ய முயன்றனர். பாதிக்கப்பட்டவர் அலறியதால், அங்குள்ள பொதுமக்கள் திரண்டு வந்து இருவரையும் பிடித்தனர். 

பின்னர் அவர்களை போலீசார் காவலில் எடுத்து வீராணம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில், ஒருவர் மேட்டூர் அருகே உள்ள ஊத்தரன்புத்தாரைச் சேர்ந்த முரளி (29) என்பதும், மற்றொருவர் மன்னார்பாளையத்தைச் சேர்ந்த 15 வயது சிறுவன் என்பதும் தெரியவந்தது.

மேலும் மூதாட்டியை பலாத்காரம் செய்து அவர் அணிந்திருந்த நகைகளை கொள்ளையடிக்க திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து வீராணம் போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

1newsnationuser5

Next Post

#கன்னியாகுமரி: நிச்சயதார்த்தம் அன்று மணமகன் உயிரிழந்த பரிதாபம்.. உருக்குலைந்த இரு குடும்பத்தினர்..!

Fri Jan 6 , 2023
கன்னியாகுமரி மாவட்ட பகுதியில் உள்ள கோடியூர் காடுவெட்டி பகுதியைச் சேர்ந்த பொறியாளர் அனுராஜ் (26). குமரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் அன்று பிரமாண்ட குடில் அமைப்பது வழக்கம்.  இவர் தனது நண்பர்களுடன் கடந்த 23ம் தேதி கிறிஸ்துமஸ் குடிலை பார்வையிட சென்றுள்ளார். அப்போது அவரது பைக் காட்டாத்துறை பகுதியில் விபத்துக்குள்ளானதில் பலத்த காயம் அடைந்தார். நண்பர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதையடுத்து அவர் […]
dead body 630 630 630 630 571 855

You May Like