மஹாராஷ்டிரா மாநில பகுதியில் உள்ள பால்கர் என்கிற மாவட்டத்தில் 16 வயதான சிறுமியை கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த நிலையில் அங்குள்ள பால்கர் கடற்கரையின் அருகில் உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத கட்டடத்துக்கு இந்த 16 வயது சிறுமியை மர்ம நபர்கள் சிலர் துாக்கிச் சென்றுள்ளனர்.
இதனை தொடர்ந்து மர்ம நபர்கள் தொடர்ந்து 12 மணி நேரத்துக்கும் மேலாக பலாத்காரம் செய்து துன்புறுத்தியதாக காவல்துறையினரிடம் பாதிக்கப்பட்ட சிறுமி புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் காவல்துறையினர் அந்த மர்ம நபர்கள் யார் என்று தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். அத்துடன் சிலர் இருக்கும் பகுதியின் இடம் தெரிந்து அதில் தொடர்புடைய எட்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.