மெகா அறிவிப்பு…! மொத்தம் 12,523 காலி பணியிடங்கள்…! வரும் 17-ம் விண்ணப்பிக்க கடைசி நாள்…!

மத்திய அரசின் MTS பணிக்கு விண்ணப்பிக்க வரும் 17-ம் தேதி கடைசி நாள்‌ ஆகும்.

மத்தியப்‌ பணியாளர்‌ தேர்வாணையத்தால் 12,523 MTS (Multi-Tasking Staff) காலி பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. தேர்வுக்கு www.ssc.nic.in என்ற இணையதளம்‌ வாயிலாக விண்ணப்பிக்க கடைசி நாள்‌:17.02.2023 ஆகும்‌. இத்தேர்விற்கான கல்வித்தகுதி, பத்தாம்‌ வகுப்பு தேர்ச்சி ஆகும்‌. மேலும்‌, 01.01.2023 அன்றைய நிலையில்‌ எஸ்‌.சி. எஸ்‌.டி பிரிவினர்‌ 30 வயதுக்குள்ளும்‌ இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்‌ 28 வயதுக்குள்ளும்‌ இருத்தல்‌ வேண்டும்‌.


முன்னாள்‌ இராணுவத்தினர்‌ மற்றும்‌
மாற்றுதிறனாளிகளுக்கு நடைமுறை விதிகளின்‌ படி வயது வரம்பில்‌ சலுகை வழங்கப்பட்டுள்ளது. தேர்வுக்‌ கட்டணமாக ரூபாய்‌ 100 என நிர்ணயம்‌ செய்யப்பட்டுள்ளது. இதில்‌ பெண்கள்‌, எஸ்‌.சி, எஸ்‌.டி வகுப்பினர்‌ மற்றும்‌ மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம்‌ செலுத்துவதிலிருந்து விலக்கு
அளிக்கப்பட்டுள்ளது. மேலும்‌, இத்தேர்வினை தமிழ்‌ மொழியிலும்‌ எழுத மத்தியப்‌ பணியாளர்‌ தேர்வாணையம்‌ அனுமதித்துள்ளது.

Vignesh

Next Post

மன அழுத்தம், படபடப்பை போக்கும் கற்பூரவள்ளி இலை...மருத்துவ குணங்களின் விபரம் இதோ!

Wed Feb 1 , 2023
கற்பூரவள்ளி இலையில் அடங்கிய மருத்துவ குணங்கள்குறித்து இந்த பதிவில் அறிந்துகொள்ளலாம். நம்நாட்டில் பல்வேறு மூலிகை செடிகள் உள்ளன. ஆனால், இந்த மூலிகை செடிகளில் உள்ள மருத்துவ குணங்களை நாம் யாரும் அறிவதில் கவனம் செலுத்துவதில்லை. இந்தநிலையில், தற்போது, கற்பூரவள்ளி இலையில் விஷக்கிருமிகளை அழிக்கக்கூடிய சிறந்த மருந்தாக விளங்கி வருகிறது. அதிக காரத்தன்மை கொண்ட கற்பூரவள்ளி இலையில், நீர்ச்சத்து அதிகம் உள்ளது. இந்த இலையை அப்படியாகவும் சாப்பிடலாம் தேனுடம் கலந்து சாப்பிடலாம். […]
karpuravalli

You May Like