இன்று சென்னை சிவானந்தா சாலையில் நடைபெறும் தவெக ஆர்பாட்டத்திற்கு 2,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மடப்புரம் கோயில் காவலர் அஜித்குமார் மரணத்துக்கு நீதி கேட்டும், உயர் நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தியும், கடந்த 4 ஆண்டுகளில் 24 பேர் காவல் நிலையத்தில் மரணம் அடைந்தது குறித்து உயர் நீதிமன்றமே அதிருப்தி தெரிவித்துள்ள நிலையில், இதுகுறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வலியுறுத்தியும் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற உள்ளது.
தவெக தலைவர் விஜய் உத்தரவின் பேரில், கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த ஏற்கெனவே அனுமதி கோரப்பட்ட இடம் அன்றைய தேதியில் வேறு காரணத்துக்குப் பயன்படுத்தப்பட இருப்பதாகக் கூறி, காவல் துறையால் மாற்று இடத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை, சிவானந்தா சாலையில் இன்று காலை 10 மணிக்குக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
இன்று சென்னை சிவானந்தா சாலையில் நடைபெறும் தவெக ஆர்பாட்டத்திற்கு 2,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். தவெக ஆர்ப்பாட்டத்தில் சுமார் 6,000 பேர் பங்கேற்பார்கள் என காவல்துறை தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது. தவெக ஆர்ப்பாட்டத்தில் பட்டாசு வெடிக்கக்கூடாது, ரோட் ஷோ நடத்தக்கூடாது உள்ளிட்ட 16 கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது, சட்டம் ஒழுங்கை பாதிக்கும் வகையில் ஆர்ப்பாட்டம் நடத்தக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Read more : “75 வயசுல கூலிங் கிளாஸ் போட்டு Slow Motion-லயே நடந்து..” பிரபல இயக்குனருக்கு ரஜினி கொடுத்த தரமான பதிலடி..