சூப்பர் திட்டம்…! படித்த வேலையற்ற இளைஞர்களுக்கு 25 சதவீத மத்திய அரசு மானியம்‌..!

subcidy 2025

தமிழக அரசின்‌ படித்த வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும்‌ UYEGP திட்டத்தின்‌ கீழ்‌ வியாபாரம்‌ சார்ந்த தொழில்கள்‌ துவங்குவதற்கு திட்ட மதிப்பீட்டு தொகையும்‌ மானிய தொகையும்‌ உயர்த்தப்பட்டுள்ளது. இதுவரை இத்திட்டத்தில்‌ அதிகபட்சமாக ரூ.5 லட்சம்‌ வரை வங்கியில்‌ கடன்பெற்று அதற்கு 25 சதவீத மானியம்‌ அதிகபட்சமாக ரூ.1.25 லட்சத்தை பெறலாம்‌ என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது புதிய அரசாணை படி அதிகபட்சமாக ரூ.15 லட்சம்‌ வரை வங்கியில்‌ கடன்பெற்று அதற்கு 25 சதவீத மானியம்‌ அதிகபட்சமாக ரூ.3.75 லட்சம்‌ வரை பெறலாம்‌.


ஏற்கனவே உள்ள UYEGP மற்றும்‌ NEED திட்டத்தில்‌ பொதுப்பிரிவு ஆண்களுக்கு சுய தொழில்‌ செய்வதற்கு அதிகபட்சமாக 35 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும்‌. எஸ்‌.சி., எஸ்‌.டி., எம்‌.பி.சி., பி.சி, சிறுபான்மையினர்‌, பெண்கள்‌, முன்னாள்‌ ராணுவ வீரர்‌ ஆகியோர்‌ 45 வயது வரை கடன்‌ பெறலாம்‌ என அறிவிக்கப்பட்டிருந்தது. புதிய அரசாணை படி UYEGP மற்றும்‌ NEED திட்டத்தில்‌ பொதுப்பிரிவு ஆண்களுக்கு 45 வயது வரையிலும்‌, எஸ்‌.சி., எஸ்‌.டி, எம்‌.பி.சி., பி.சி., சிறுபான்மையினர்‌, பெண்கள்‌, முன்னாள்‌ ராணுவ வீரர்‌ ஆகியோர்க்கு 55 வயது வரையிலும்‌ வங்கியில்‌ விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தொழில்‌ முனைவோர்களுக்கு மானியம்

தமிழ்நாடு அரசு எஸ்‌.சி. மற்றும்‌ எஸ்‌.டி. பிரிவு தொழில்‌ முனைவோர்களுக்கு சிறப்பு திட்டமாக அண்ணல்‌ அம்பேத்கர்‌ வெல்லும்‌ தொழில்‌ முனைவோர்‌ பிசினஸ்‌ சாம்பியன்ஸ்‌ திட்டத்தை தமிழக அரசு இவ்வாண்டு நிதிநிலை அறிக்கையில்‌ சட்டமன்றத்தில்‌ அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின்‌ கீழ்‌ ஆர்வமுள்ள எஸ்‌.சி. மற்றும்‌எஸ்‌.டி. பிரிவு தொழில்‌ முனைவோர்‌ தொடங்கவிருக்கும்‌, உற்பத்தி, வணிகம்‌ மற்றும்‌ சேவை சார்ந்த நேரடி வேளாண்மை தவிர்த்த தொழில்‌ திட்டங்களுக்கும்‌ வங்கி கடன் உதவியோடு மானியம்‌ வழங்கப்படும்‌.

இத்திட்டத்தின்‌ கீழ்‌ பயன்‌ பெற விண்ணப்பதாரர்களுக்கு எந்தவித கல்வித்தகுதியும்‌ ‘தேவையில்லை, வயது வரம்பு 55-க்கு மிகாமல்‌ இருக்க வேண்டும்‌. புதிய தொழில் முனைவோராகவும்‌ ஏற்கனவே தொழில்‌ தொடங்கி அதனை விரிவு படுத்தவிரும்புவோரும்‌ விண்ணப்பிக்கலாம்‌. அதிக பட்ச மானிய தொகை 1.5 கோடியும்‌,மாதாந்திர வட்டி தொகையில்‌ 6 சதவீதத்திற்கு வட்டி மானியமும்‌, மொத்ததிட்டத் தொகையில்‌ 65 சதவித வங்கி கடனாகவும்‌, 85 சதவீத அரசின்‌ மானியமாகவும்‌ வழங்கப்படும்‌. எனவே பயனாளர்கள்‌ தம்‌ பங்காக விளிம்புத்‌ தொகை செலுத்த வேண்டிய தேவை இல்லை. www.msmeonline.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

Read More: வக்ஃப் சொத்து நிர்வாகம்.. புதிய உமீத் (UMEED) மைய போர்ட்டலை தொடங்கிய மத்திய அரசு…!

Vignesh

Next Post

பணக்காரர்களாக மாறப்போகும் மத்திய அரசு ஊழியர்கள்..!! அடிப்படை சம்பளமே ரூ.51,480..!! அமலாகிறது 8-வது ஊதியக்குழு..!!

Sat Jun 7 , 2025
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நீண்ட காலமாகவே 8-வது ஊதியக்குழுவின் உருவாக்கத்திற்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் டிசம்பர் 2025இல் நிறைவடைய உள்ள நிலையில், 8-வது ஊதியக்குழுவுக்கான பரிந்துரைகள் ஜனவரி 2026 முதல் அமலுக்கு வரவேண்டும். ஆனால், இதில் சற்று தாமதம் ஏற்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே, மத்திய அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் பலவிதமான கேள்விகள் தற்போது எழுகிறது. அதாவது, மாத ஊதியம் எவ்வளவு அதிகரிக்கும்..? […]
8th Pay Commission Money 2025

You May Like