திருநெல்வேலி மாவட்டம
பகுதியில் உள்ள திசையன்விளை கிராமத்தில் வசிப்பவர் தங்கதுரையின் மகனான ராஜேந்திரன் (வயது 20) எனபவர். இவர் தனியார் பாலிடெக்னீக் கல்லூரியில் படித்து வருகிறார். கடந்த அக். 9ம் தேதி குலசேகரப்பட்டினம் பகுதியில் நடைபெறும் தசரா திருவிழாவுக்கு சென்று வருகிறேன் என புறப்பட்டவர் திரும்பி வீட்டிற்கு வரவில்லை.
இது தொடர்பாக காவல்துறையில் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், ஒரு வருடமாக ரஜேந்திரனை தேடி வந்த காவல் துறையினர் 16 வயது சிறுவனை சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், ராஜேந்திரன் விவகாரத்தில் கைதான ஒரு சிறுவன் உள்ளிட்ட மேலும் 2 சிறுவர்களால் கொல்லப்பட்டது வெளிவந்தது. ராஜேந்திரன் காதலித்து வந்த அதே பெண்ணை 16 வயதாகவும் சிறுவனும் காதலித்து வந்திருக்கிறான்.
இதன் காரணமாக ராஜேந்திரன் தன்னுடைய காதலுக்கு இடையூறாக இருப்பார் என்று நினைத்த சிறுவன், சம்பவத்தன்று நுங்கு வெட்டி சாப்பிடாம் என்று கூறி ராஜேந்திரனை ஏமாற்றி தூத்துக்குடி மாவட்டம் அரசூர் காட்டுப்பகுதிக்குள் அழைத்து சென்றுள்ளான்.
அந்த காட்டுப்பகுதியில் வைத்து தனது கூட்டாளிகளான 16 வயது மற்றும் 14 வயது சிறுவர்களுடன் சேர்ந்து 3 பேரும் ராஜேந்திரனை வெட்டிச்சாய்த்து கொலை செய்துள்ளனர். மேலும், அவரது உடலை பனைமர அடியில் குழி தோண்டி புதைத்துவிட்டு எதுவும் தெரியாதது போல நடித்துள்ளனர். இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்ட 3 சிறார்களும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.