பெற்றோர் உடல்நிலையை கவனிக்க 30 நாட்கள் விடுமுறை…! மத்திய அரசு அறிவிப்பு

Central govt staff 2025

மத்திய அரசு ஊழியர்கள் தங்கள் பெற்றோர்களின் உடல்நிலையை கவனிக்க 30 நாட்கள் விடுமுறை எடுத்துக்கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பெற்றோர்களை கவனிக்க அரசு ஊழியர்கள் விடுப்பு எடுக்க ஏதேனும் வழிமுறை உள்ளதா என்று நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு, பதில் அளித்த மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்; மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு 30 நாட்கள் ஈட்டிய விடுப்பு, 20 நாட்கள் அரைச் சம்பள விடுப்பு, 8 நாட்கள் தற்செயல் விடுமுறை மற்றும் 2 நாட்கள் கட்டுப்படுத்தப்பட்ட விடுமுறை அனுமதிக்கப்படுகிறது. மேலும், இந்த 30 நாட்கள் விடுப்புகளை முதிய பெற்றோர்களை கவனித்து கொள்வது உட்பட எந்தவொரு தனிப்பட்ட காரணத்திற்காகவும் பயன்படுத்திக்கொள்ளலாம். குடும்ப பொறுப்புகளை கவனித்துக்கொள்ளும் மத்திய அரசு ஊழியர்களுக்கு இது ஒரு தெளிவான வழிகாட்டுதல் என தெரிவித்துள்ளார்.


மற்ற விடுமுறை

குழந்தை பராமரிப்பு விடுமுறையை பொறுத்தவரை 730 நாட்கள் வழங்கப்படும் நிலையில், இந்த விடுமுறையின் போது விடுமுறை பயணச் சலுகையை பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இந்த விடுமுறையின் போது வெளிநாட்டுப் பயணத்திற்கான சலுகைகளையும் அதிகாரிகள் வழங்க முன்வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளி குழந்தையை பராமரிப்பதற்கான விடுமுறை சலுகையை 15 நாட்களிலிருந்து 5 நாட்களாக குறைக்கும் விதி 43சி, பெண்களின் நலன் கருதி நீக்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளி பெண்கள் தங்கள் குழந்தையை பராமரிக்க ஏதுவாக அவர்களது அகவிலைப்படியில் 25 சதவீதத் தொகையான மாதம் 3 ஆயிரம் ரூபாய் சிறப்புப் படியாக வழங்கப்பட்டு வந்தது. இதனை 50 சதவீதமாக உயர்த்தி கடந்த 2022 ஜூலை 1 ஆம் தேதி முதல் மத்திய அரசு அமல்படுத்தியது. மகப்பேறின் போது குழந்தை இறக்கும்பட்சத்தில் மனஅளவில் பாதிக்கப்படும் தாய்மார்களின் நலனை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு சிறப்பு மகப்பேறு விடுப்பாக 60 நாட்கள் வரை எடுத்துக் கொள்ளலாம்.

Vignesh

Next Post

ஷாக்!. 119 நாடுகளில் பரவிய வைரஸ்!. உலகளவில் 5 பில்லியன் மக்கள் பாதிக்கப்படுவார்கள்!. WHO எச்சரிக்கை!.

Fri Jul 25 , 2025
ஒவ்வொரு ஆண்டும், மழைக்காலம் வந்தவுடன், கொசுக்களின் அச்சுறுத்தல் தொடங்குகிறது. ஒவ்வொரு ஆண்டும், கொசுக்களால் பரவும் நோய்களால் ஆயிரக்கணக்கான மக்கள் இறக்கின்றனர். தேசிய தலைநகர் டெல்லி உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் டெங்கு மற்றும் சிக்குன்குனியாவின் அச்சுறுத்தல் தொடர்கிறது. உலக அளவில் சிக்குன்குனியாவின் அச்சுறுத்தல் தற்போது அதிகரித்து வருகிறது. உலக சுகாதார அமைப்பின் (WHO) சமீபத்திய அறிக்கையின்படி, உலகெங்கிலும் சுமார் ஐந்து பில்லியன் மக்கள் இந்த நோயால் பாதிக்கப்படும் அபாயத்தில் உள்ளனர். […]
Chikungunya WHO warning 11zon

You May Like