குடிபோதையில் மைத்துனரை கொலை செய்த நபர் அதிரடி கைது…..! கோவையில் பரபரப்பு…..!

கோயமுத்தூர் மாவட்டம் இடையார்பாளையம் அடுத்துள்ள கோவில்மேடு சபேதார் இரண்டாவது தெருவில் தன்னுடைய தாயார் வேலம்மாளுடன் வசித்து வருபவர் மணிகண்டன் இவர் மரவேலை பார்த்து வருகிறார். இவருக்கு தங்கமாரி மற்றும் செல்வி என்று 2 மூத்த சகோதரிகள் இருக்கிறார்கள்.


மணிகண்டனுக்கு ஏற்கனவே குடிப்பழக்கம் இருந்திருக்கிறது. இந்த சூழ்நிலையில் கடந்த 21 ஆம் தேதி வேளாண்டிபாளையம் சின்னண்ணன் செட்டியார் வீதியில் வசித்து வரும் தங்கமாரியை அவருடைய கணவர் ஐயப்பன் அடித்ததாக சொல்லப்படுகிறது.

இதனை மனதில் வைத்துக் கொண்டிருந்த மணிகண்டன், கடந்த 23ஆம் தேதி குடிபோதையில் தங்கமாரியின் வீட்டிற்கு சென்று ஐயப்பனை தகாத முறையில் திட்டி இருக்கிறார். இது குறித்து ஏற்பட்ட பிரச்சனையில் இரும்பு கம்பியால் மணிகண்டனின் நெற்றியில் அடித்தும், அவருடைய வலது மார்பு போன்ற பகுதிகளில் கம்பியால் குத்தி விட்டு அங்கிருந்து கணுவாய் திருவள்ளுவர் நகரில் இருக்கின்ற அவருடைய தாய் வீட்டிற்கு சென்று விட்டார் ஐயப்பன்.

ஆகவே மணிகண்டனின் தாய் வீட்டிற்கு சென்று பார்த்த போது மணிகண்டன் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த கிடந்தார் இது தொடர்பான தகவலின் அடிப்படையில் பெரியநாயக்கன்பாளையம் டி எஸ் பி நமச்சிவாயம், துடியலூர் காவல்துறை ஆய்வாளர் ஞானசேகரன் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வரைந்து வந்து உயிரிழந்த மணிகண்டனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

இதனைத் தொடர்ந்து, கணுவாயில் இருக்கின்ற தன்னுடைய தாய் வீட்டில் பதுங்கி இருந்த அய்யப்பனை கைது செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றன குடிபோதையில் தன்னுடைய மனைவியின் தம்பியை கொலை செய்து கணவரால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.

Next Post

டிகிரி படித்திருந்தால் போதும்.. 577 காலி பணியிடங்கள்.. UPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..

Mon Feb 27 , 2023
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமான UPSC, இபிஎஃப்ஓ அமைப்பில் (EPFO) அமலாக்க அதிகாரிகள் மற்றும் உதவி நிதி ஆணையர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.. விண்ணப்பதாரர்கள் UPSC–upsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த காலியிடத்திற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி மார்ச் 17, 2023 ஆகும். இதன் மூலம் 577 காலி பணியிடங்களை நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காலியிடங்கள் விவரம்: மொத்தம் 577 காலியிடங்கள் (418 அமலாக்க அதிகாரி […]
யுபிஎஸ்சி தேர்வு..!! இனி மொபைல் இருந்தால் மட்டும் போதும்..!! ஏன் தெரியுமா..?

You May Like