5949 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை.. 4.18 லட்சம் தபால் வாக்குகள் வந்துள்ளன..! – தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் பேட்டி

archana patnayak

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் அளித்த பேட்டியில், தேர்தல் பணிகளை சீராக நடத்துவதற்காக மாநிலம் முழுவதும் 3.60 லட்சம் பேர் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக 83 ஆயிரம் போலீஸ் மற்றும் பாதுகாப்பு பணியாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.


கூடுதலாக, 300 கம்பெனி துணை ராணுவப் படையினர் தமிழகத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் 5949 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என அடையாளம் காணப்பட்டுள்ளது. அங்கு எந்த விதமான அசம்பாவிதங்களும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

வாக்குச்சாவடிகளில் ஒழுங்கை பேணும் வகையில், செல்போன்கள் உள்ளே கொண்டு செல்ல அனுமதி இல்லை. வாக்கு எண்ணும் பணிக்காக, தமிழ்நாடு முழுவதும் 62 இடங்களில் எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார். தபால் வாக்குகள் குறித்து பேசும்போது, தற்போது வரை 4.18 லட்சம் தபால் வாக்குகள் பெறப்பட்டுள்ளன என தெரிவித்தார்.

அதேபோல், இந்த தேர்தலில் 14.59 லட்சம் முதல் முறை வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வாக்காளர்களுக்கு வழங்கப்படவிருந்ததாக கூறப்படும் ₹543 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

Read more: டேங்கர் லாரி மீது ஆம்னி பேருந்து மோதி கோர விபத்து.. 20 பேரின் நிலை என்ன..? கோவில்பட்டியில் கோரம்..

English Summary

4.18 lakh postal votes have been received.. 5949 polling stations are tense..! – Interview with Chief Electoral Officer Archana Patnaik

Next Post

40% இந்தியர்கள் அமெரிக்காவை விட்டு நிரந்தரமாக வெளியேற விரும்புகின்றனர்! அவர்களின் அமெரிக்கக் கனவைச் சிதைத்தது எது?

Wed Apr 22 , 2026
அமெரிக்காவில் செட்டில் ஆக வேண்டும் என்பது, லட்சக்கணக்கான இந்தியர்களின் கனவாகும்.. இருப்பினும், கார்னகி அறக்கட்டளையின் ஒரு புதிய கணக்கெடுப்பு இப்போது வெளிவந்துள்ளது. அதில், “10 இந்திய-அமெரிக்கர்களில் 4 பேர் அமெரிக்காவை விட்டு வெளியேறுவது குறித்துச் சிந்தித்து வருகின்றனர்” என்று கூறப்பட்டுள்ளது. ஏன்? அவர்களின் கனவு சிதைந்துவிட்டதா? ஒருவேளை அவர்கள் வெளியேறினால், எங்கே செல்வார்கள்? சமீப காலம் வரை, டாலர்களில் சம்பாதித்து சிலிக்கான் பள்ளத்தாக்கில் குடியேற வேண்டும் என்று கனவு கண்டவர்களில், […]
us indians

You May Like