5 மாதங்களாக 3 ஆண் நண்பர்களுக்கு பலியான மாணவி..!

டெல்லி மாநகர பகுதியில் உள்ள நொய்டாவில் வசித்து வரும் 12-ம் வகுப்பு மாணவி ஒருவர், கடந்த 5 மாதங்களாக தனது நண்பர்கள் 3 பேரால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு வந்துள்ளார்.


அதோடு மட்டும் அல்லாமல் அதனை வீடியோவாக பதிவுசெய்து மாணவியின் நண்பர்கள் வைத்துள்ளனர். இது பற்றி வெளியில் யாரிடமாவது சொன்னால் வீடியோவை இணையத்தில் பதிவேற்றிவிடுவோம் என்று மிரட்டியுள்ளனர். 

அத்துடன், மாணவியை குடும்பத்தோடு கொலை செய்து விடுவதாக நண்பர்கள் மிரட்டியுள்ளனர். அந்த நண்பர்கள் 3 பேரும் அவர்களது மற்ற நண்பர்களுக்கு மாணவியை விருந்தாக்க நினைத்துள்ளனர்.

இதனால் மனமுடைந்து போன மாணவி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். அச்சமயத்தில் அவரது சகோதரி துரிதமாக செயல்பட்டு மாணவியை காப்பாற்றியுள்ளார். இதனை தொடர்ந்து இது பற்றி மாணவி பெற்றோரிடம் கூறியுள்ளார். 

இதனையடுத்து பெற்றோர்கள் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மறைந்துள்ள 3 பேரையும் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

1newsnationuser5

Next Post

தமிழக பெண்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம்.. விரைவில் குட்நியூஸ்

Sun Jan 22 , 2023
குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கும் திட்டம் குறித்து புதிய தகவல் வெளியாகி உள்ளது.. திமுக ஆட்சிக்கு வந்தால், குடும்ப தலைவிக்கு மாதம் 1,000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என அக்கட்சி தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது.. எனவே எப்போது இந்த உரிமைத் தொகை வழங்கப்படும் என்று பெண்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்தது.. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இன்னும் அந்த திட்டம் […]
ration card money

You May Like