ஜாலி..‌! வரும் 6-ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…! வெளியான புதிய அறிவிப்பு…! முழு விவரம் உள்ளே…!

ஆருத்ரா தரிசனம் திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு 6-ம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை.

தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் கொண்டாடப்படும் விழாக்கள், சிறப்பு தினங்கள் மற்றும் பண்டிகைகளுக்கு மாநிலம் முழுவதும் விடுமுறை அறிவித்து உத்தரவிடுவது வழக்கம். தமிழகத்தின் ஒரு சில குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் கொண்டாடப்படும் பண்டிகைகள் மற்றும் விழாக்களுக்கு தமிழக அரசு மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக குறிப்பிட்ட பகுதியில் மட்டும் உள்ளூர் விடுமுறை வழங்க அரசு அனுமதி வழங்கியுள்ளது.


அந்த விடுமுறை தினங்களில் அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்படும். அந்த வகையில் ஆருத்ரா தரிசனம் திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு 06.01.2023 தேதி ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த மாவட்ட ஆட்சியர் தனது அறிவிப்பில்; ஆருத்ரா தரிசனம் திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு, வரும் 6-ம் தேதி வியாழன்கிழமை ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்படுகிறது. இந்த உள்ளூர் விடுமுறைக்கு பதில் 21.01.2023 சனிக்கிழமை அன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு பணிநாளாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

சோகம்...! கெட்டு போன உணவை சாப்பிட்ட 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி...! விசாரணை தீவிரம்...!

Mon Jan 2 , 2023
கேரளாவில் ஞானஸ்நான நிகழ்ச்சியில் கெட்டு போன உணவை சாப்பிட்ட 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள கீழ்வாய்பூர் அருகே உள்ள தேவாலயத்தில் ஞானஸ்நானத்தின் போது கெட்டுப்போன உணவை அருந்திய 100 க்கும் மேற்பட்டோர் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கிற்கு ஆளாகி உள்ளனர். அவர்களில் 70 பேர் அதிக அளவில் வாந்தி எடுத்து, வயிற்று வலியால் அவதிப்பட்டு உள்ளனர். பாதிக்கப்பட்டுள்ளனர், அவர்களில் ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார். […]
hospital iStock 1 1024x683 1

You May Like