#அரியலூர்: 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்.. 54 வயது முதியவர் கைது..! 

அரியலூர் மாவட்ட பகுதியில் உடையார்பாளையம் அருகே அமைந்துள்ள விக்ரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் கல்யாண் கருணாநிதி (54)என்பவர் . இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமியை கடந்த ஜூலை மாதத்தில் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார்.


இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த விக்ரமங்கலம் போலீசார் கருணாநிதியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு அரியலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வழக்கறிஞர் ராஜா இந்த வழக்கில் அரசு சார்பில் ஆஜரானார்.

பாலியல் வன்கொடுமை வழக்கில் கருணாநிதி குற்றவாளி என தீர்ப்பளித்த நீதிபதி ஆனந்தன், அவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.11 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு ரூ.7 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார்.

1newsnationuser5

Next Post

சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடு - அமெரிக்கா பரிசீலனை

Wed Dec 28 , 2022
BF7 கொரோனா பரவாமல் தடுக்க சீனாவில் இருந்து வருவோருக்கு கட்டுப்பாடு விதிக்க அமெரிக்கா பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் புதிய வகை உருமாறிய பிஎப்7 கொரோனா வேகமாகப் பரவி ருத்ர தாண்டவம் ஆடி வருகிறது. இதனால் சீனாவில் ஏராளாமானோர் உயிரிழந்துள்ளதாக அங்கிருந்து வெளியாகியுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த புதிய வகை கொரோனா வைரஸ் அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் நுழைந்துவிட்டது. இந்நிலையில் உலக […]
Joe Biden 1

You May Like