ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் கற்பக விநாயகர் கோவில் தெருவில் வசித்து வருபவர் சேர்ந்தவர் கருணாநிதி (51). இவர் சென்னை ஆவடியில் இருக்கும் ஒரு தனியார் பள்ளியில் பேருந்து ஓட்டுனராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் இவர் ஒரு பெண்ணுக்கு கடந்த 2020-ஆம் வருடம் ஐந்து லட்சம் ரூபாய் வட்டிக்கு கடன் கொடுத்துள்ளார். அந்த பெண்ணால் அந்த பணத்தை திருப்பி கொடுக்க முடியவில்லை.
இதை தொடர்ந்து கருணாநிதி கடனை கேட்டு அந்த பெண்ணை மிரட்டி வந்துள்ளார். இதை தொடர்ந்து அந்த பெண்ணின் 17 வயது மகளுக்கு போன் செய்து, கடனை திருப்பி கொடுக்கவில்லை என்றால் உன் தாயை கொன்று விடுவேன் என்று மிரட்டி உள்ளார். மேலும் அந்த சிறுமியை ஒரு லாட்ஜூக்கு வரச்சொல்லி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனை கருணாநிதி செல்போனில் வீடியோ எடுத்து வைத்து கொண்டு. சிறுமிக்கு தொடர்ந்து ஒரு வருடத்திற்கும் மேலாக பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.
இப்போது அந்த சிறுமி திருச்சியில் இருக்கும் ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். இதனை தெரிந்து கொண்ட கருணாநிதி மீண்டும் அவரது செல்போனுக்கு வீடியோ அனுப்பி மிரட்டினார். இதையடுத்து அந்த மாணவி 1098-க்கு போன் செய்து குழந்தைகள் நலக்குழு மூலமாக கடந்த 6-ஆம் தேதி திருச்சி கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் காவல்துறையினர் சென்னை சென்று நிதி நிறுவனத்தில் இருந்து போன் செய்வது போல் கருணாநிதியை தொடர்பு கொண்டு அவரது வீட்டின் அருகில் இருக்கும் ரயில்வே நிலையத்திற்கு வரவழைத்தனர். அவர் அங்கு வந்தவுடன் காவல்துறையினர் அவரை கைது செய்தனர். பின்னர் அவரை திருச்சி மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைந்தனர்.