விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னையிலிருந்து 350 சிறப்புப்பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி கோலாலமாக கொண்டாடப்படுகிறது. இதனால் பல மாநிலங்களில் பள்ளி, கல்லூரி அரசு நிறுவனங்களுக்கும் விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் பள்ளி கல்லூரி என அனைவருக்கும் இன்று பொது விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்று வரும் விதமாக அரசு சார்பில் சிறப்பு போக்குவர த்து பேருந்து இயக்கப்படும் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
இது குறித்த அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக தொலைதூரங்களுக்கு இயக்கப்படும் அரசு விரைவுப்போக்குவரத்துக்கழக பேருந்துகளில் முன்பதிவு செய்து தங்கள் ஊர்களுக்கு செல்லவும் மற்றும் அங்கிருந்து பயணிகள் திரும்பும் வகையில் பயணம் செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேற்படி, சேவையை பயணிகள் அனைவரும் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என அரசு போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.