அசாமில் 11 வயது சிறுமியை அவரது மாமா முறை உறவினரே பாலியல் வன்புனர்வு செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அசாம் மாநிலம், துப்ரி மாவட்டத்தில் 11 வயது சிறுமியை அதுல் பிஸ்வாஸ் (31) என்பவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். சிறுமிக்கு பிஸ்வாஸ் மாம முறை. இந்த சம்பவம் தொடர்பாக தாம்ராத் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில் எனது உறவினர் அதுல் பிஸ்வாஸ் என்பவர் என்னுடைய மகளை வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். என் மகள் வீட்டுக்கு அழுது கொண்டே வந்தார். அதன் பிறகு தனக்கு நடந்த சம்பவத்தைப் பற்றி சொன்னார்.
உறவினரான அவர் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு என்னுடைய குழந்தை அழுத போது, அவருக்கு 100 ரூபாய் பணமும், ஒரு சிப்ஸ் பாக்கெட்டையும் கையில் கொடுத்து அனுப்பி உள்ளார் என கூறினார்.
காவல்துறையினர் அந்த நபரின் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இவருக்கு ஆயுள் தண்டனையும், ஒரு லட்சம் அபராதமும் விதித்துள்ளது.