fbpx

தமிழகத்துக்கு ஆரஞ்சு அலர்ட்.. கொட்டி தீர்க்க காத்திருக்கும் மிக கனமழை.!

தமிழகத்தில் வழக்கமாக அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் உள்ளிட்ட மூன்று மாதங்களும் வடகிழக்கு பருவமழையானது பெய்யும். இருப்பினும், சமீபத்தில் வங்க கடலில் உருவாகிய இருக்கும் சித்ரங் புயல் காரணமாக வடகிழக்கு பருவமழையானது தமிழகத்தில் துவங்குவதற்கான நேரத்தில் துவங்கவில்லை.

தாமதமாக தான் வடகிழக்கு பருவமழை துவங்குகிறது. இது குறித்து சமீபத்தில் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டது. அக்டோபர் 29 ஆன இன்று துவங்கும் இந்த பருவ மழை அடுத்த மாதம் நான்காம் தேதி வரை முதல் மழைப்பொழிவு இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இத்தகைய சூழலில், புதுச்சேரி, ஆந்திரா, தமிழகம் மற்றும் ஒடிசாவில் அடுத்த 24 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதன் காரணமாக, நவம்பர் 1 மற்றும் 3 உள்ளிட்ட தேதிகளில் தெற்கு கடலோர ஆந்திரா மற்றும் வட தமிழகத்தில் கனமான மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் தமிழ்நாட்டுக்கு ஆரஞ்சு அலட் விடுக்கப்பட்டு இருக்கிறது.

Rupa

Next Post

தோழி வீட்டில் ஜூஸ் குடித்த நபர்.. உடல் பாகங்கள் அழுகி உயிரிழந்த திகில் சம்பவம்.!

Sat Oct 29 , 2022
கேரளா திருவனந்தபுரத்தின் அருகே மால்யங்கரையை பகுதியை சேர்ந்த ஜியோ என்றழைக்கப்படும் ஜெயராஜ் என்பவருக்கு ஷரோன் ராஜ்(23) என்ற மகன் இருந்துள்ளார். இவர், நெயூர் கிறிஸ்தவக் கல்லூரியில் பிஎஸ்சி கதிரியக்கவியல் துறையில் இறுதியாண்டு பயின்று வந்துள்ளார். இதனிடையில் சில தினங்களுக்கு முன்பு 14-ம் தேதி, ஷரோன் ராஜ் தனது காதலி கொடுத்த ஜூஸை பருகியுள்ளார். அதன்விளைவாக, அவருக்கு உடல்நிலையில் பாதிப்பு ஏற்படவே, அதனைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி பெற்றார். […]

You May Like