நியாய விலைக்கடைகளின் செயல்பாடுகளை நேரடியாக கண்காணிக்கும் செயலியை அமைச்சர் சக்கரபாணி தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் நியாயவிலைக் கடைகளில் 98.3 % பேர் பயோமெட்ரிக் முறையில் பொருட்களை வாங்கி வருகிறார்கள். திருவல்லிக்கேணி, அரியலூர் மாவட்டங்களில் சோதனை முறையில் கருவிழி ஸ்கேனர் மூலம் பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. விரைவில், தமிழகம் முழுவதும் செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.
அதேபோல், ஜனவரி மாதம் முதல் தர்மபுரி, நீலகிரி ஆகிய இரண்டு மாவட்டங்களில் சிறுதானியங்கள் சோதனை முறையில் நியாயவிலைக்கடைகளில் விநியோகம் செய்யப்படவுள்ளது. பொதுமக்களின் வரவேற்பைப்பொறுத்து மற்ற மாவட்டங்களுக்கு இத்திட்டம் விரிவுபடுத்தப்படும். அதேபோல், பொருட்களைக்கொண்டு செல்லும் லாரிகளில் ஜிபிஎஸ் பொருத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும் நெல்கொள்முதல் நிலையங்களிலிருந்து நேரடியாக, அரவை ஆலைகளுக்கு எடுத்துச்சென்ற பின்னர் அவை உணவு தானியக்கிடங்குகளில் கொண்டு சேர்க்கும் வகையில், டெண்டர் விடுவதற்காகப் பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.