தமிழக முழுவதும் பாஜக சார்பில் இன்று 1100 ஒன்றியங்களில் போராட்டம் நடைபெற உள்ளது.
ஆவின் பால் ஆரஞ்சு நிற பாக்கெட் லிட்டருக்கு ரூ.12 உயர்த்தியது மற்றும் மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி நாளை போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஏற்கனவே அறிவித்து இருந்தார். அதன் படி இன்று அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.
போராட்டத்தில் மக்களும் கலந்து கொள்ளும் வகையில் நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது. 1100 ஒன்றியங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. ஈரோட்டில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொள்ள உள்ளார். சென்னையில் மட்டும் 66 இடங்களில் இருந்த போராட்டமானது நடைபெற உள்ளது. இதில் கராத்தே தியாகராஜன் போன்ற முக்கிய தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.