#வானிலை : பாடல் வரிகள் மூலமா வானிலை பற்றி வெதர்மேன் பிரதீப் ஜான் அப்டேட்.. குவியும் லைக்..!

இணைய தளத்தில் தமிழ்நாடு வெதர்மேன் பனிப்பொழிவு பற்றி ஒரு அப்டேட் கூறியுள்ளார்.


அந்த பதிவில் ”அடுத்த 3-4 நாட்கள் தமிழகத்தில் உள் மாவட்டங்கள் மற்றும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பெரும் பனிப்பொழிவு இருக்கும் என்றும். இவை தென் மாவட்டங்களுக்கு பொருந்தாது” என்றும் அதில் பதிவிட்டுள்ளார். மேலும் பனிதொடர்பான செய்தியை பாடல் வரிகளாக 

”பனிவிழும் மலர்வனம் 

உன் பார்வை ஒரு வரம், 

பனிவிழும் மலர்வனம் 

உன் பார்வை ஒரு வரம்”

என பதிவேற்றியுள்ளார் வெதர்மேன்.

இந்த நிலையில் வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி மெதுவாக வலுவடைந்து அரபிக்கடலை நோக்கி சென்றுள்ளது. இதனையடுத்து தமிழ்நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் கனமழைகளும்  கொட்டித் தீர்த்து வந்துள்ளது. 

இதனை தொடர்ந்து தெற்கு அந்தமான் கடல் பகுதியில், வளிமண்டல சுழற்சி காரணத்தினால் , தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டியுள்ள அந்தமான் கடல் பகுதியில் இன்று காற்றழுத்த தாழ்வுப் பகுதிகள் உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. மேலும் தமிழ்நாட்டில் வருகிற 19-ம் தேதிவரை மிதமான மழையே பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

1newsnationuser5

Next Post

#விருதுநகர் : டீக்கடை சண்டையால் ஆபாசமான முறையில் பழிவாங்கிய இளைஞர்..!

Wed Nov 16 , 2022
விருதுநகர் மாவட்ட பகுதியில் உள்ள திருத்தங்கலில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு நீதிமன்ற ஊழியர் பணிக்கு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அவர் பணியில் இன்னும் சேரவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்னர், ராஜா டீக்கடையில் வழக்கம் போல் உட்கார்ந்திருந்த போது, அங்கு கடைக்கு வந்த இளைஞருடன் ராஜாவுக்கு தகராறு ஏற்பட்டுள்ளது. தற்போது அந்த இளைஞருக்கு திருமணமானதை தொடர்ந்து அவர் […]
இதுக்கா இப்படியொரு தண்டனை...மகனுக்கு சூடு போட்டு; கண்ணில் மிளகாய் பொடியை தூவிய கொடூர தாய்...கேரளாவில் பயங்கரம்!

You May Like