நொச்சி இலை ஆவி பிடிப்பதற்கு மட்டும் அல்ல நிறைய மருத்துவ குணங்களை கொண்டது. மருத்துவ நன்மைகளை பற்றி இங்கே காண்போம்.
நீண்ட நாள் தீராத தலைவலியால் அவதிப்படுபவருக்கு நொச்சியின் காய்ந்த இலைகளை முகைமூட்டி, அதிலிருந்து வரும் புகையை சுவாசித்தால் தலைவலி தீரும். நுரையீரல் மற்றும் ஆஸ்துமா பிரச்னை உள்ளவர்கள் இதை தவிர்ப்பது நல்லது. நொச்சி இலையைக் கசக்கி தலையில் வைத்துக் கட்டினால் தலைப்பாரமும் குறைந்து வரும்.
உடல் பலவீனம், சீதப்பேதி, சாறு, அஜீரணம், மந்தமாகச் செயல்படும் ஈரல், நரம்பு வலி, செரிமானம், ஆகியவற்றுக்கும் பயன் அளிக்கிறது. உடலின் பகுதியில் ஏதேனும் வீக்கம் மற்றும் கட்டிகள் இருப்பின் நொச்சி இலைகளை வதக்கி கட்டினால் அவை கரைந்து போகும் என தெரிய வந்துள்ளது. கால், கை, முட்டி வலிக்கும் நொச்சி இலையை கசக்கி துணியில் வைத்து கட்டி வர வலிகள் மெல்லமாக குறையும்.