#கள்ளக்குறிச்சி : மின் கம்பத்தில் மோதிய பேருந்து.. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மாணவர்கள்..!

கள்ளக்குறிச்சி மாவட்ட பகுதியில் இயங்கிவரும் தனியாா் பாலிடெக்னிக் கல்லூரி ஒன்றில் வெள்ளிக்கிழமை மாலை நேரத்தில் கல்லூரி முடிந்த பிறகு, 40 மாணவா்களை ஏற்றிக் கொண்டு சங்கராபுரம் வட்ட பகுதியில் உள்ள , லட்சுநாயக்கன்பட்டியை நோக்கி கல்லூரி பேருந்து சென்று கொண்டிருந்தது.


அப்போது, பேருந்து எதிர்பாராத விதமாக இந்திலி பகுதியில் வந்தபோது, திடீரென அச்சு முறிந்து கட்டுப்பாட்டினை இழந்த அந்தப் பேருந்து, சாலையோரத்தில் இருந்த மின் கம்பம் ஒன்றின் மீது மோதி பெரும் விபத்து ஏற்பட்டது. இதனை தொடர்ந்து உடனடியாக மின் இணைப்புத் துண்டிக்கப்பட்டதால், பேருந்தில் இருந்த 40 மாணவா்கள் அதிருஷ்டவசமாக உயிா் தப்பினார்கள்.  

பேருந்து மோதியதில் மின் கம்பம் சேதமடைந்தது.இது குறித்து தகவல் அறிந்த சின்னசேலம் பகுதி காவல்துறையினர் நேரில் சென்று விசாரணை செய்து வருகின்றனர். அத்துடன் கவனக்குறைவாக பேருந்தை இயக்கி சென்ற சங்கராபுரம் வட்ட பகுதியில் உள்ள , புதுப்பட்டுவை கிராமத்தை சோந்த ஓட்டுநா் முருகன் (35) மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதனையடுத்து விசாரணை நடத்தி வருகின்றனா். 

1newsnationuser5

Next Post

’துணிவு’ திரையரங்க உரிமையை பெற்றது ’லைகா’ நிறுவனம்…!!

Sat Nov 19 , 2022
அஜித் நடித்து வெளியாக உள்ள ’துணிவு’ திரையரங்க உரிமையை ’லைகா’ நிறுவனம் பெற்றுள்ளது. நடிகர் அஜித் நடிப்பில் பொங்கல் அன்று வெளியாக உள்ள திரைப்படம் ’துணிவு’. ரசிர்கள் மத்தியல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்திரைப்படத்தை போனிகபூர் தயாரித்துள்ளார். இத்திரைப்படத்தில் தமிழகத்தில் ரெட்ஜெயன்ட் நிறுவனம் வெளியிடுகின்றது. இது தொடர்பான தகவல்கள் ஏற்கனவே வெளியானது. தற்போது தியேட்டரிக்கல் ரைட்ஸ் எனப்படும் திரையரங்க உரிமையை ’லைகா’ நிறுவனம் பெற்றுள்ளது. இந்த அறிவிப்பை அந்நிறுவனம் டுவிட்டரில் […]
அமெரிக்காவில் வெளியாகும் துணிவு..!! உரிமத்தை கைப்பற்றிய KGF-2, RRR, PS1 வினியோகஸ்தர்..!!

You May Like