#Breaking: அரசியல் விமர்சகர் கிஷோர் கே சுவாமி கைது…! போலீசார் நடவடிக்கை

அரசியல் விமர்சகர் கிஷோர் கே சுவாமியை போலீசார் கைது செய்துள்ளனர்.

தொலைக்காட்சி விவாதங்கள் மூலம் அறிமுகமாகிய கிஷோர் கே ஸ்வாமி சமூகவலைதளங்களில் திமுக-விற்கு எதிரான கருத்துக்களை பதிவிடுவதில் மிக முக்கியமான நபர். இவர் பெரும்பாலும் பாஜகவின் ஆதரவு நிலைப்பாட்டை முன்னிறுத்தி வந்திருக்கிறார். அதுமட்டுமின்றி இவர் மாற்று சிந்தனைக் கொண்ட அரசியல் பிரமுகர்களையும் விமர்சிப்பதை வழக்கம் உடைவர்.


இந்த நிலையில் தான் சமூக வலைதளத்தில், முதல்வர் குறித்து அவதுாறாக கருத்து பதிவிட்ட, கிஷோர் கே சாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதை அடுத்து முன்ஜாமின் கோரி மனு தாக்கல் செய்தார். மனுவை நேற்று முன்தினம் தள்ளுபடி செய்து, மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த 1-ம் தேதி சமூக வலைதளத்தில் மழை வெள்ள பாதிப்பு குறித்து, முதல்வர் ஸ்டாலினை விமர்சிக்கும் வகையில், அவதுாறாக கருத்து பதிவிட்டார். இதன் காரணமாக மத்திய குற்றப்பிரிவு போலீசார், கிஷோர் கே சாமி மீது வழக்குப்பதிவு செய்து, விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பினர்.

ஆனால் அவர் முன்ஜாமின் கேட்டு, மனு தாக்கல் செய்தார். மனு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு வழக்கறிஞரின் வாதத்தை ஏற்ற நீதிபதி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்த நிலையில் அவரை பாண்டிச்சேரியில் வைத்து போலீசார் இன்று அதிகாலை கைது செய்தனர்.

Vignesh

Next Post

#Job Alert..!! தமிழகத்தில் மாதம் ரூ.50,000 வரை சம்பளம்..!! 8ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்..!!

Mon Nov 21 , 2022
மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தமிழக நீலகிரியில் உள்ள கன்டோன்மென்ட் போர்டு வெலிங்டன் அலுவலகத்தில் 8ஆம் வகுப்பு வரை படித்தவர்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதிகளின் முழு விவரங்களை இங்குத் தெரிந்துகொண்டு விண்ணப்பியுங்கள். பணியின் விவரங்கள்: பணியின் பெயர் பணியிடம் சம்பளம் கல்வித்தகுதி தூய்மை பணியாளர் (Safaiwala) 4 ரூ.15,700-50,000 8ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி எதிர்பார்க்கும் தகுதிகள்: தூய்மை […]
central govt jobs 1 1598945180

You May Like