திமுக கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளில் மிகவும் கவர்ந்த குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1000 வழங்கும் திட்டம் தான் முக்கியமானதாக பார்க்கப்பட்டது.அதே போல் தற்பொழுது திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டுகள் கடந்த நிலையில் இதுவரை அதற்கான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்த திட்டம் குறித்து எதிர்க்கட்சிகளும் பல கேள்விகளை முன் வைத்தனர். இந்நிலையில் இந்த திட்டத்தை உலக மகளிர் தினமான மார்ச் 8 ஆம் தேதி தொடங்கி வைக்கலாமா என்பது குறித்து தமிழக அரசு தீவிர ஆலோசனை நடத்தியுள்ளதக் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்த, ஆலோசனை வழங்க பொருளாதார நிபுணர் அரவிந்த் சுப்பிரமணியன் தலைமையிலான குழுவுக்கு உதவ துணைக் குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், நிதித்துறையின் கூடுதல் செயலாளர் பிரசாந்த் வடநரே உட்பட 4 பேர் அடங்கிய துணைக்குழுவை அமைத்தும் உத்தரவிட்டுள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு பொருளாதார நிபுணர் குழுவுடன் தமிழக அரசின் நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் குறித்து ஆலோசனை நடத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.