தெலுங்கானா மாநில பகுதியில் பிராச்சி ரத்தோட் மற்றும் ரூத் ஜான் பால் என்ற இரு திருநங்கைகள் வசித்து வருகின்றனர். திருநங்கைகள் இருவரும் மருத்துவம் பயின்று முடித்த நிலையில் பல்வேறு மருத்துவமனைகளில் இவர்களுக்கு வேலை மறுக்கப்பட்டுள்ளது.
பல இடங்களில் இப்படி வேலை கிடைக்காத நிலையில், தெலுங்கானா அரசு இவர்களுக்கு அரசு மருத்துவமனையில் வேலையை வழங்கியுள்ளது. இதனை தொடர்ந்து தெலுங்கானாவில் பணியமர்த்தப்பட்ட முதல் திருநங்கை இவர்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்கள் இருவரும் உஸ்மானியா பகுதியில் அரசு மருத்துவமனையில் மருத்தவர்களாக சேர்ந்திருக்கின்றனர். இது பற்றி பிராச்சி ரத்தோட் பேசிய போது, அரசின் இந்த செயலானது நாங்கள் எதிர்பார்க்கவில்லை என்றும், கடந்த 2018 ஆண்டு முதல் சுமார் 15 மருத்துவமனைகளால் நான் நிராகரிக்கப்பட்டேன் என்று கூறி பிராச்சி ரத்தோட் தனது மகிழ்ச்சி மற்றும் நெகிழ்ச்சி தருணத்தை பகிர்ந்துள்ளார்.