சிறுத்தையின் வேட்டைக்கு பலியான கல்லூரி மாணவி..! 

மைசூர் பகுதியில் வசித்து வரும் மேகனா என்ற 20 வயது கல்லூரி மாணவியின் வீடானது வனப்பகுதியில் அமைந்துள்ளது. இவர் தினமும் கல்லூரிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பும்போது அந்த வனப்பகுதியின் வழியாக தான் வீட்டிற்கு செல்ல வேண்டும். 


வழக்கம் போல் நேற்று மாலை நேரத்தில் கல்லூரி முடிந்த பிறகு வீட்டிற்கு மாணவி சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது, திடீரென அங்கே வந்த சிறுத்தை ஒன்று அவரின் மீது பாய்ந்துள்ளது. அத்துடன் அவரை கடித்து குதறியுள்ளது.

சிறுத்தையிடம் இருந்து மீளமுடியாத மேக்னா பலத்த காயங்களுடன், காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என கத்தி கூச்சலிட்டுள்ளார். இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்த மக்கள் அங்கு சென்ற போது, மக்கள் கூட்டத்தைப் பார்த்தவுடன் சிறுத்தை வனப்பகுதிக்குள் தபபி ஓடிவிட்டது.

மேலும் மேக்னாவை காப்பாற்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிறுத்தை தாக்கியதில் படுகாயம் அடைந்த மேகனா மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

1newsnationuser5

Next Post

#கிருஷ்ணகிரி:5 குழந்தைகளை பரிதவிக்க விட்டு பெற்றோர்கள் செய்த செயல்..!

Sat Dec 3 , 2022
கிருஷ்ணகிரி மாவட்ட பகுதியில் உள்ள வேப்பனஹள்ளியில் ஹைதர் அலி தன்னுடைய மனைவி ஷானுமா, 4 பெண் குழந்தைகள் மற்றும் ஒரு மகனுடன் வசித்து வருகிறார். தம்பதிகள் இருவரும் பை செய்யும் தொழிலை செய்து வருகின்றனர்.  இந்த நிலையில், நேற்று காலையில் தம்பதிகள் தங்களின் பிள்ளைகளை பள்ளிகளுக்கு அனுப்பி வைத்துவிட்டு வேலைக்குச் செல்லாமல் வீட்டிலே இருந்துள்ளனர். இதனை தொடர்ந்து குழந்தைகள் பள்ளி முடிந்து மாலை நேரத்தில் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, ஹைதர் […]
1546242231 SuicideThnikstock

You May Like