மைசூர் பகுதியில் வசித்து வரும் மேகனா என்ற 20 வயது கல்லூரி மாணவியின் வீடானது வனப்பகுதியில் அமைந்துள்ளது. இவர் தினமும் கல்லூரிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பும்போது அந்த வனப்பகுதியின் வழியாக தான் வீட்டிற்கு செல்ல வேண்டும்.
வழக்கம் போல் நேற்று மாலை நேரத்தில் கல்லூரி முடிந்த பிறகு வீட்டிற்கு மாணவி சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது, திடீரென அங்கே வந்த சிறுத்தை ஒன்று அவரின் மீது பாய்ந்துள்ளது. அத்துடன் அவரை கடித்து குதறியுள்ளது.
சிறுத்தையிடம் இருந்து மீளமுடியாத மேக்னா பலத்த காயங்களுடன், காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என கத்தி கூச்சலிட்டுள்ளார். இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்த மக்கள் அங்கு சென்ற போது, மக்கள் கூட்டத்தைப் பார்த்தவுடன் சிறுத்தை வனப்பகுதிக்குள் தபபி ஓடிவிட்டது.
மேலும் மேக்னாவை காப்பாற்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிறுத்தை தாக்கியதில் படுகாயம் அடைந்த மேகனா மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.