#Tngovt: பயிர் காப்பீடு செய்ய டிசம்பர் 15ஆம் தேதி வரை கால அவகாசம் நீடிப்பு…! எப்படி விண்ணப்பிப்பது…? முழு விவரம்…

டிசம்பர் 15ஆம் தேதி வரை விவசாயிகள் பயிர் காப்பீடு செய்யலாம்.

சம்பா நெற்பயிரை காப்பீடு செய்திடாத விடுபட்ட விவசாயிகள், வரும் 15-ம் தேதிக்குள் காப்பீடு செய்ய வேளாண்மைத்துறை காலநீட்டிப்பு செய்து அறிவித்துள்ளது. அதன் படி, நாமக்கல், திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் இரண்டாம் போக நெல் நடவு சற்று தாமதமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதால், நெல் விவசாயிகள் டிசம்பர் 15-ம் தேதி வரை காப்பீடு செய்து கொள்ளலாம்.


பயிர்க்கடன் பெற்றுள்ள விவசாயிகளாக இருந்தால், சம்பந்தப்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும், பயிர்க்கடன் பெறாத இதர விவசாயிகள் தங்கள் அருகில் உள்ள பொது சேவை மையங்களிலும் (இ-சேவை மையங்கள்) காப்பீடு செய்து கொள்ளலாம். மேலும், https://pmfby.gov.in/ என்ற இணையதளத்தில் “விவசாயிகள் கார்னர்” எனும் பக்கத்தில் விவசாயிகள் நேரிடையாகவும் காப்பீடு செய்து கொள்ளலாம்.

Vignesh

Next Post

அல்சர் முழுமையாக குணமடைய கற்றாழை மட்டுமே போதும்!!! முடி வளர்தல் போன்ற பல நன்மைகள் தரும்...

Tue Dec 6 , 2022
தினமும் ஆயிரம் வேலைகளில் பரபரப்பாக ஓடி கொண்டிருகக்கும் நிலையில் காலை உணவை சரியான நேரத்திலும் எடுத்துக் கொள்ளாததால் அல்சர் உண்டாகிறது. இவ்வாறு ஏற்படும் அல்சரை எவ்வாறு சரிப்படுத்தலாம் என்பதனை இந்த பதிவின் மூலம் அறியலாம். தேவையான பொருட்கள்: ஒரு சோற்றுக்கற்றாழையை முழுவதுமாக எடுத்து அதன் மேலிருக்கும் தோலை செத்தி எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதனுள் இருக்கும் வெண்மை நிற ஜெல்லை மட்டும் தனியாக எடுத்து பாத்திரத்தில் கொள்ள வேண்டும். […]
aloe vera .....................

You May Like