பழனியில் பேருந்து நிலையம் எதிரில் நகை கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த நகை கடையில் நகை வாங்க வந்தது போல் பெண் ஒருவர் நகை வாங்க சென்றுள்ளார், அப்பொழுது கடை ஊழியர்களிடம் நகைகளை எடுத்துக்காட்டுமாறு கூறி ஒவ்வொரு நகையாக பார்வையிட்டு உள்ளார்.
அந்த நகைகளில் ஒரு செயினை பார்ப்பது போல் எடுத்து வைத்து வேறு நகையை பார்ப்பது போல் நகை கடையில் வேலை செய்பவர்களிடம் வேறு நகையை காண்பிக்குமாறு கூறியுள்ளார். அப்பொழுது வேலை பார்ப்பவர்கள் வேறு நகையை எடுப்பதற்காக திரும்பி சென்று நகையை எடுக்கும் அந்த நேரத்தில் பர்தா அணிந்த பெண் தன் கையில் வைத்திருந்த செயினை தன்னுடைய பர்தாவில் மறைத்து வைத்துள்ளார்.
பிறகு எல்லா நகையையும் பார்ப்பது போல் ஒவ்வொரு நகையாக பார்த்துக் கொண்டிருந்தார். அப்பொழுது கடையில் வேலை பார்க்கும் நபர் நகைகளை ஒவ்வொன்றாக சரி பார்க்கும் பொழுது நகை குறைவது போல் அவருக்கு தோன்றியுள்ளது. இதனால் சந்தேகமடைந்த அந்த நபர் தன்னுடைய முதலாளியிடம் கூறியுள்ளார்,
நகைக் கடை முதலாளியும் சிசிடிவி கேமராவை ஆராய்ந்து பார்க்கலாம் என்று எடுத்து பார்க்கும் பொழுது அந்தப் பெண் ஒரு பவுன் செயினை எடுத்து பார்ப்பதும், பிறகு அதை தன்னுடைய பர்தாவில் மறைத்து வைப்பதும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது,
இதை தொடர்ந்து ,அந்த நகைக்கடை முதலாளி காவல் நிலையத்திற்கு போன் செய்து கூறியுள்ளார். காவல்துறை அதிகாரிகள் உடனடியாக நகை கடைக்கு வந்து, நகைக்கடையில் வேலை செய்வோரிடம் விசாரித்து, பின்பு சிசிடிவி கேமராவில் பார்வையிட்டு அந்த பெண்ணை கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் முஸ்லிம் போல் பர்தா அணிந்து வந்த அந்தப் பெண்ணின் பெயர் லதா என்பதும், அவர் பழனி கோட்டைமேடு தெருவை சேர்ந்தவர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது,
பின்னர் போலீஸ் அதிகாரிகள் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி நகை திருடியதற்காக நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையிலடைத்துள்ளது.