ஈரோடு மாவட்ட பகுதியில் உள்ள கதிரம்பட்டியில் நெசவாளரான முருகேசன் என்பவர் தனது மகள் ஸ்ரீநிதியுடன் வசித்து வருகிறார். மகள் தனியார் பள்ளியில் 11- ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
நேற்றைய தினத்தில் உடல் நல குறைவின் காரணமாக ஸ்ரீநிதி பள்ளிக்கு செல்லாமல் இருந்துள்ளார். இந்த நிலையில் ஸ்ரீநிதியின் தாயானவர் கடைக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார்.
வீட்டில் நுழைந்த போது தனது மகள் தூக்கில் சடலமாக தொங்கியுள்ளதை பார்த்து ஸ்ரீநிதியின் தாய் கதறி அழுதார். இது குறித்து பெற்றோர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
மேலும் இதனால் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மாணவியின் உடலை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அத்துடன் வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.