#தூத்துக்குடி: தாய் வீட்டிற்கு சென்ற பெண்ணை காணவில்லை..!

தூத்துக்குடி மாவட்டம், தெற்கு கழுகுமலை ஓம் சக்தி நகரில் வசித்து வருபவர் விஜயராஜ். இவருக்கும், கழுகுமலை காமராஜர் நகர் 3வது தெருவில் வசிக்கும் நாகராஜன் மகள் கிரிஜாவுக்கும் நான்கு மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது.


கடந்த 22ம் தேதி கிரிஜா தனது தாய் வீட்டிற்கு சென்றார். இதையடுத்து கிரிஜா தெற்கு கழுகுமலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் வீட்டிற்கு வரவில்லை. இதனால், குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடினர்.

அவரது செல்போன் எண்ணும் அணைக்கப்பட்டிருந்தது. நாகராஜன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தற்போது இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

1newsnationuser5

Next Post

நேற்று ஒரே நாளில் எத்தனை பேருக்கு புதியதாக கொரோனா வைரஸ் பாதிப்பு...?

Mon Dec 26 , 2022
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 196 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 02 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 1807 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் மொத்த […]
There is a risk of corona spreading more during festive season..! Central government warning to state governments..!

You May Like