தூத்துக்குடி மாவட்ட பகுதியில் உள்ள தருவைகுளம் ஏ.எம்.பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாரியப்பன் மகன் தங்கமுனியசாமி (26) என்பவர், சீதாசெல்வி (24) என்பவரை காதலித்து வந்துள்ளார்.
இருவரும் காதலை வீட்டில் தெரியப்படுத்திய நிலையில், அவர்கள் ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளனர். இதனால் சில மாதங்களுக்கு முன்பு குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. இன்று காலை வழக்கம்போல் கதவு திறக்கப்படாததால், அக்கம் பக்கத்தினர் வீட்டுக்குள் புகுந்து பார்த்துள்ளனர். அப்போது, தம்பதியர் இருவரும் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தனர்.
இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலின் பேரில் தருவைகுளம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து தூத்துக்குடி சப்-கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார். இருவரின் தற்கொலைக்கு இவர்களுக்கிடையே ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சனையா, அல்லது காதல் திருமணம் செய்ய குடும்பத்தினரிடம் இருந்து அழுத்தம் வந்ததா என விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிகிறது.