#சேலம்: முதன்முறையாக மது அருந்திய வாலிபர் இறந்த பரிதாபம்..!

சேலம் மாவட்டம் வெங்கம்பட்டியில் வசிக்கும் அண்ணாமலை, அவரது மகன் சந்தோஷ், ஒன்பது நண்பர்களுடன் புத்தாண்டைக் கொண்டாட ஏற்காடு சென்றார்.


ஏற்காட்டை சுற்றி பார்த்துவிட்டு ஒண்டிக்கடி பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து நள்ளிரவில் மது அருந்தியும், கேக் வெட்டியும் புத்தாண்டை கொண்டாடினர். 

திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் சந்தோஷை நண்பர்கள் ஏற்காடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் சந்தோஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். 

இந்த நிலையில் அன்றைய தினத்தில் தான் சந்தோஷ் முதன்முறையாக மது அருந்தியது நண்பர்கள் கூறுகையில் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து பிரேத பரிசோதனை அறிக்கையில் உணவு மூச்சுக்குழாயில் சிக்கி இறந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. உயிரிழந்தவருக்கு மனைவியும் மூன்று வயது குழந்தையும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser5

Next Post

’பள்ளி, கல்லூரிகளில் நான் படிக்கும்போது ஜஸ்ட் பாஸ் தான் ஆவேன்’..!! அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஓபன் டாக்..!!

Wed Jan 4 , 2023
பள்ளி, கல்லூரிகளில் நான் படிக்கும் போது அனைத்து பாடங்களிலும் ஜஸ்ட் பாஸ் தான் ஆவேன் என உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார். தமிழ் மொழியின் இலக்கிய மரபுகளைக் கொண்டாடும் வகையில், தமிழக அரசு சார்பில் சென்னையில் இலக்கியத் திருவிழா நடைபெறுகிறது. இதில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவ்விழாவில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “பள்ளி, கல்லூரிகளில் நான் படிக்கும் போது அனைத்து பாடங்களிலும் ஜஸ்ட் பாஸ் […]
udhayanidhistalin2

You May Like