fbpx

இளம் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை…! வீடியோவை வைத்து மிரட்டிய இளைஞர் காவல் துறையினர் அதிரடி…!

நாட்டின் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் ரீதியான குற்றங்கள் அதிகரித்து வருகின்றனர். அதனை கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் பலவிதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும், இதுபோன்ற சம்பவங்கள் அவ்வப்போதும் நடைபெற்ற வண்ணம் தான் இருக்கின்றனர்.

லக்னோவில் துணிக்கடை ஒன்றை நடத்தி வருபவர் சுராஜ் திவாரி (23). இவர் சென்ற 2021 ஆம் வருடம் சமூக வலைதளம் மூலமாக ஒரு பெண்ணுடன் பழகி வந்துள்ளார். அந்த பெண் தனக்கு வேலை இல்லை என்று தெரிவிக்க, இவர் தன்னுடைய துணி கடையில் வேலை போட்டு தருவதாக கூறியுள்ளார்.

அந்தப் பெண்ணும் கடந்த 2021 ஆம் வருடம் மார்ச் மாதத்தில் துணிக்கடையில் வேலைக்கு சேர்ந்தார். அப்போது ஒரு நாள் அந்த இளம் பெண்ணை இரவில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது தனியாக அழைத்துச் சென்று சுராஜ் அவரை தாக்கி வலுக்கட்டமாக பாலியல் வன்கொடுமை செய்ததாக சொல்லப்படுகிறது. இந்த சம்பவத்தை புகைப்படம் வீடியோவாகவும் எடுத்து வைத்து சுராஜ் அந்த இளம் பெண்ணை மிரட்டி வந்திருக்கிறார்.

இந்த புகைப்படத்தையும் வீடியோவையும் வைத்து சுராஜ் அந்த பெண்ணை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. ஆகவே அந்த பெண் கடந்த 2022 ஆம் வருடம் பிப்ரவரி மாதம் வேலையை விட்டு சென்று விட்டார் இந்த நிலையில், சுராஜ் அந்தப் பெண்ணின் வீட்டிற்கு சென்று தொடர்ச்சியாக வீடியோவை காண்பித்து தொந்தரவு கொடுத்து வந்ததாக சொல்லப்படுகிறது.

அதன் பிறகு சில நாட்களுக்குப் பின்னர், அந்த பெண் ஆட்டோவில் சென்று கொண்டிருந்த சமயத்தில் ஆட்டோவை இடைமறித்த சுராஜ் புகைப்படத்தை காட்டி மீண்டும் அந்த பெண்ணை மிரட்டி இருக்கிறார் இதனால் பாதிக்கப்பட்ட அந்த இளம் பெண் காவல் நிலையத்தில் புகார் வழங்கியதை தொடர்ந்து சுராஜ் திவாரியை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.

Next Post

3 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த ரயில்வே காவலர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது…!

Thu Jan 5 , 2023
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரையில் இதற்கு ஒரு முடிவே இல்லையா? என்று பலரும் கேட்டு வருகிறார்கள். அதிலும் பச்சிளம் குழந்தைகளுக்கு எதிராக இது போன்ற வன்கொடுமைகள் தொடர்வது அதிர்ச்சி அளிக்கும் விதமாக இருக்கிறது. சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் ரயில்வே காவலராக பணியாற்றி வருகின்ற ஒரு பெண் ரயில்வே குடியிருப்பில் வசித்து வருகின்றார். கணவருடன் உண்டான கருத்து வேறுபாடு காரணமாக, இவர் […]

You May Like