புதுச்சேரி ஒன்றியம் முத்தியால்பேட்டை கணேஷ் நகர் 3வது குறுக்குத் தெருவில் வசித்து வருபவர் தசரதன். கட்டிட தொழிலாளியான இவருக்கு இளவரசி என்ற மனைவி உள்ளார்.
இந்த தம்பதிக்கு சக்திமுருகன், பாலமுருகன் என இரு மகன்கள் உள்ளனர். சக்தி முருகன் காரைக்கால் நவோதயா பள்ளியிலும், இரண்டாவது மகன் பாலமுருகன் (14) தனியார் பள்ளியில் 9ம் வகுப்பும் படித்து வந்தனர்.
புதுவை வேல் சொக்கநாதன் திருமண மண்டபம் அருகே உள்ள டியூசன் சென்டரில் பாலமுருகன் படித்து வந்தார். அவரது தந்தை பாலமுருகனை மாலை 5 மணிக்கு டியூசன் அழைத்துச் சென்று இரவு 7 மணிக்கு வீட்டுக்கு அழைத்து வருவது வழக்கம்.
ஆனால், நேற்று முன்தினம் பாலமுருகன் டியூசன் செல்லவில்லை. இதை கண்டித்த தசரதன், கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் இருவரும் வேலைக்கு சென்றனர். வீட்டில் பாலமுருகன் மட்டும் இருந்தார்.
மாலையில் தசரதன் வேலை முடிந்து வந்த நிலையில், வீட்டின் இரண்டாவது மாடியில் உள்ள மின்விசிறி பாலமுருகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த தசரதர் கதறி அழுதார்.
இதுகுறித்து தகவல் அறிந்த முத்தியால்பேட்டை போலீசார் விரைந்து வந்து பாலமுருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.