#நாகப்பட்டினம்: ஒரே தூக்கில் தாய், மகள் பிணமாக கிடந்த அதிர்ச்சி..!

நாகப்பட்டினம் மாவட்டம் பகுதியில் உள்ள உப்பாளையத்தைச் சேர்ந்தவர் ஜம்புகேசவன் (38). இவரது மனைவி மகேஸ்வரி (30). இவர்களுக்கு ரோகித், 11, என்ற மகனும், அப்சனா, 10, என்ற மகளும் உள்ளனர்.


ஜம்புகேசவன், 2014ல் நடந்த கொலை வழக்கில், திருச்சி மத்திய சிறையில் உள்ளார். இதனால், நாகப்பட்டினம் நகராட்சியில் மகேஸ்வரி தற்காலிக களப்பணியாளராக பணியாற்றி வருகிறார். 

மூத்த மகன் ரோஹித் அருகில் வசித்த சித்தி அமுதா என்பவரது வீட்டில் வளர்க்கப்பட்டு வந்தார். மகேஸ்வரி கடந்த சில நாட்களாக வேலை இல்லாமல் மகள் அப்சனாவுடன் வீட்டில் தங்கியுள்ளார்.

நேற்று காலை அமுதா மகேஸ்வரி வீட்டில் வந்து பார்த்தபோது, ​​அப்சனா சேலையின் ஒரு பகுதியில் மின் விசிறியில் தூக்கில் தொங்கியது தெரிந்தது. அருகிலேயே மகேஸ்வரியும் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். 

போலீசார் விசாரணையில், மகேஸ்வரியின் கணவர் ஜம்புகேசவன் பல ஆண்டுகளாக சிறையில் இருப்பதால், வாடகை கட்ட முடியாமல் தற்கொலை செய்து கொள்ளலாம் என மனமுடைந்து கூறியதை, அப்பகுதி மக்கள் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளனர். 

1newsnationuser5

Next Post

கேப்டன் விஜயகாந்த் மகனுக்கு தேமுதிகவில் புதிய பொறுப்பு..? பொதுக்குழுவில் வெளியாகும் முக்கிய அறிவிப்பு..!!

Tue Jan 10 , 2023
தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்த் தற்போது உடல்நலக்குறைவால், வீட்டிலேயே இருந்து வருகிறார். கட்சிப் பணிகள், பொது நிகழ்ச்சிகள் என எதிலும் அவர் கலந்து கொள்வதில்லை. ஏதாவது முக்கியமான விழாக்களில் மட்டும் தன்னுடைய தொண்டர்களை விஜயகாந்த் சந்திக்கிறார். இந்நிலையில், விஜயகாந்த்துக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், அவருடைய மனைவி பிரேமலதா விஜயகாந்துக்கு தேமுதிக செயல் தலைவர் பதவியை கொடுப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதோடு, விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரனுக்கு தேமுதிகவில் ஒரு முக்கிய […]
கேப்டன் விஜயகாந்த் மகனுக்கு தேமுதிகவில் புதிய பொறுப்பு..? பொதுக்குழுவில் வெளியாகும் முக்கிய அறிவிப்பு..!!

You May Like