நாகப்பட்டினம் மாவட்டம் பகுதியில் உள்ள உப்பாளையத்தைச் சேர்ந்தவர் ஜம்புகேசவன் (38). இவரது மனைவி மகேஸ்வரி (30). இவர்களுக்கு ரோகித், 11, என்ற மகனும், அப்சனா, 10, என்ற மகளும் உள்ளனர்.
ஜம்புகேசவன், 2014ல் நடந்த கொலை வழக்கில், திருச்சி மத்திய சிறையில் உள்ளார். இதனால், நாகப்பட்டினம் நகராட்சியில் மகேஸ்வரி தற்காலிக களப்பணியாளராக பணியாற்றி வருகிறார்.
மூத்த மகன் ரோஹித் அருகில் வசித்த சித்தி அமுதா என்பவரது வீட்டில் வளர்க்கப்பட்டு வந்தார். மகேஸ்வரி கடந்த சில நாட்களாக வேலை இல்லாமல் மகள் அப்சனாவுடன் வீட்டில் தங்கியுள்ளார்.
நேற்று காலை அமுதா மகேஸ்வரி வீட்டில் வந்து பார்த்தபோது, அப்சனா சேலையின் ஒரு பகுதியில் மின் விசிறியில் தூக்கில் தொங்கியது தெரிந்தது. அருகிலேயே மகேஸ்வரியும் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.
போலீசார் விசாரணையில், மகேஸ்வரியின் கணவர் ஜம்புகேசவன் பல ஆண்டுகளாக சிறையில் இருப்பதால், வாடகை கட்ட முடியாமல் தற்கொலை செய்து கொள்ளலாம் என மனமுடைந்து கூறியதை, அப்பகுதி மக்கள் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளனர்.