உறவினர்களுக்குள் ஏற்பட்ட நிலத்தகராறு….! வெட்டி சாய்க்கப்பட்ட 2 பேர் தென்காசி அருகே கொடூரம்….!

தென் மாவட்டங்களை பொறுத்தவரையில் அரிவாள் கலாச்சாரத்தை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்று காவல்துறையினர் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.ஆனால் காலம் காலமாக தென் மாவட்ட மக்களின் இரத்தத்திலேயே ஊறிப்போன அரிவாள் கலாச்சாரம் அவ்வளவு எளிதில் குறைந்து விடுமா என்ன?


தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள வாசுதேவநல்லூர் பகுதியில் தேவ விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த உறவினர்களான ஐயப்பன் மற்றும் செல்லத்துரை உள்ளிட்டோர் இடையே நில பிரச்சினை குறித்து முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று செல்லதுரை மற்றும் ஐயப்பன் உள்ளிட்டோரிடையே தகராறு ஏற்பட்டது.இந்த தகராறு ஐயப்பன் என்பவரை செல்லதுரை அறிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் சம்பத இடத்திலேயே ஐயப்பன் துடி துடித்து உயிரிழந்தார்.

இதனைக் கண்டு கோபமடைந்த ஐயப்பனின் மகன் கருப்பசாமி, தன்னுடைய தந்தையை வெட்டி கொலை செய்த செல்லதுரையை பழிக்கு வழி வாங்கும் விதத்தில், செல்லதுரையை கத்தியால் குத்தி கொலை செய்திருக்கிறார்.

இந்த நிலப் பிரச்சனை குறித்து உறவினர்களுக்கு இடையே மாறி, மாறி நடைபெற்ற தாக்குதலில் இரட்டை கொலை நடைபெற்றுள்ளது. இந்த சம்பவம் வாசுதேவநல்லூர் பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வரைந்து வந்த காவல்துறையினர், கொலை நடைபெற்ற இடத்தை பார்வையிட்டு விட்டு கொலை தொடர்பாக தீவிர விசாரணை நடத்தினர். அதன் பிறகு கொலை செய்யப்பட்ட இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அத்துடன் இந்த கொலை குறித்து வாசுதேவநல்லூர் காவல்துறையினர் செல்லதுரையை கத்தியால் குத்தி கொலை செய்த கருப்பசாமியை கைது செய்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Post

கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட தகராறு….! தற்கொலை செய்து கொண்ட மனைவி பெட்ரோல் ஊற்றி கொளுத்திய கணவன்….!

Thu Jan 19 , 2023
திருமணம் என்றாலே திருமணம் செய்து கொள்ள போகும் மணமக்களுக்கு நிச்சயமாக மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். ஆனால் அந்த எதிர்பார்ப்பு மணமக்கள் இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பாக இருக்க வேண்டுமே தவிர மாமனார் வீட்டில் இருந்து வரும் வரதட்சணையை வைத்து நாம் குடும்பம் நடத்தி விடலாம் என்று நினைத்தால் நிச்சயமாக அந்த மன வாழ்க்கை இனிமையானதாக இருக்காது. மணமக்கள் இருவரும் ஒருவரை, ஒருவர் புரிந்து கொண்டு […]
Chennai 2

You May Like