fbpx

திருமணம் செய்த பெண்கள் 22 முதல் 30 வயதிற்குள் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும்…! இல்லை என்றால் சிக்கல்…!

திருமணம் செய்துகொண்டு தாய்மையை தழுவ பெண்கள் அதிக வயது வரை காத்திருக்க வேண்டாம் என அஸ்ஸாம் முதல்வர் கூறியுள்ளார்.

அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கூறுகையில், திருமணம் செய்துகொண்டு தாய்மையை தழுவ பெண்கள் அதிக வயது வரை காத்திருக்க வேண்டாம். தாய்மையை வரவேற்பதற்கான “பொருத்தமான வயது” 22 முதல் 30 வயது வரை இருக்கும் என்று கூறினார்.

பெண்கள் தாயாக மாறுவதற்கு அதிக வயது வரை காத்திருக்கக்கூடாது, ஏனெனில் இது சிக்கல்களுக்கு வழிவகுக்கிறது. தாய்மைக்கு ஏற்ற வயது 30 வயது வரை தான். இன்னும் திருமணம் ஆகாத பெண்கள் விரைவில் திருமணம் செய்ய வேண்டும்” என்று முதல்வர் ஹிமந்த சர்மா கூறி உள்ளார்.

ஆனால் அதே சமயம், பலரைப் போல பெண்கள் அதிக நேரம் காத்திருக்கக் கூடாது… எல்லாவற்றிற்கும் பொருத்தமான வயது இருக்கும் வகையில் கடவுள் நம் உடலைப் படைத்திருக்கிறார் என்றார்.

Vignesh

Next Post

பம்பர் வேலைவாய்ப்பு.. ரயில்வேயில் 4,103 காலியிடங்கள்.. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்..

Sun Jan 29 , 2023
தெற்கு மத்திய ரயில்வேயில் காலியாக உள்ள 4103 அப்ரண்டிஸ் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு செயல்முறையை விரைவில் முடிவடைய உள்ளது. ஏசி மெக்கானிக், கார்பெண்டர், எலக்ட்ரீசியன், எலக்ட்ரானிக் மெக்கானிக், ஃபிட்டர், பெயிண்டர் போன்ற தொழில்களில் பயிற்சி பெறுவதற்கு ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.. ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் தென்கிழக்கு ரயில்வேயின் scr.indianrailways.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடுவதன் மூலம் விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்யலாம். தெற்கு மத்திய ரயில்வே வெளியிட்டுள்ள […]

You May Like